கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Published On 2022-12-28 01:59 IST   |   Update On 2022-12-28 07:09:00 IST
  • ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
  • முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். 


இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

Tags:    

Similar News