சினிமா
நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால் நாளும் புதியதாகும் - வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து
நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கும் நிலையில், நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019
2018-ம் ஆண்டு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், 2019 ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், உலகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
வைரமுத்து தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது,
`ஆண்டில் ஏது பழையதும் புதியதும்?
நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
நாளும் புதியதாகும்.
புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்.
வாழ்த்துக்கள்.
#2019 #HappyNewYears2019 #HappyNewYear'
இவ்வாறு கூறியிருக்கிறார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019