சினிமா
ஜே.வாழவந்தான் இயக்கத்தில் ஜே.பி., துர்கா, வைஷாலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏமாத்த போறேன் படத்தின் முன்னோட்டம்.
``டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி, பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடும் ஆசாமிகளை பற்றி ஒரு படம் தயாராகி இருக்கிறது. உண்மை சம்பவங்களின் தொகுப்பாக-பெண்களை எச்சரிக்கும் படமாக இது தயாராகியுள்ளது. படத்துக்கு, `ஏமாத்த போறேன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்தை பற்றி அதன் டைரக்டர் ஜே.வாழவந்தான் கூறியதாவது:- ``தற்போதைய சமுதாயத்தில் ஏமாறும் பெண்கள் அதிகரித்து இருப்பது போல், அவர்களை ஏமாற்றும் ஆசாமிகளும் அதிகரித்து வருகிறார்கள். இதற்கு காரணம், சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். இதுபற்றி இந்த படம் பேசுகிறது. திரைக்கதையில் பல உண்மை சம்பவங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட குற்றங்கள் புரிபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறோம்.
அறிமுக நடிகர் ஜே.பி. கதாநாயகனாக நடிக்க, துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டா வது கதாநாயகியாக வைஷாலி நடித்துள்ளார். அன்னை சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.பி.துர்கா தயாரித்து இருக்கிறார்.''