சினிமா
கிசுகிசு

சண்டைக் காட்சிக்கு பயப்படும் பிரபல நடிகர்

Published On 2020-07-09 16:47 GMT   |   Update On 2020-07-09 16:47 GMT
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சண்டை காட்சிக்கு பயப்படுகிறாராம்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறாராம். இந்தப் படம் கொரானா ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் படத்தின் நாயகன் தற்போது இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வந்த பிறகே படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாராம்.

கொரானா பயத்தின் காரணமாக நடிகர் இந்த முடிவை எடுத்திருக்கிறாராம். ஆனால் இயக்குனரோ நடிகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். படத்தில் இருப்பதே இரண்டு சண்டைக் காட்சிகள்தான். அதுவும் வேண்டாம் என்றால் படம் சிறப்பாக இருக்காது என்று இயக்குனர் கூறி வருகிறாராம்.
Tags:    

Similar News