சினிமா செய்திகள்
null

'வீர தீர சூரன்' படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை - டெல்லி உயர்நீதிமன்றம்

Published On 2025-03-27 11:40 IST   |   Update On 2025-03-27 13:37:00 IST
  • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.

இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வீர தீர சூரன் படத்தின் 9 மணி காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 9 மணி காட்சிக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்யவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News