சினிமா செய்திகள்

எழுந்து வா இமயமே! பாரதிராஜா முன் பாட்டு பாடி மீண்டு வர சொன்ன வைரமுத்து

Published On 2023-08-01 05:29 GMT   |   Update On 2023-08-01 05:29 GMT
  • கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்தவர்.
  • இவர் பாரதிராஜாவுக்காக பாட்டு பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு பாடி நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, எழுந்து வா இமயமே என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News