சினிமா செய்திகள்

படப்பிடிப்பை தொடங்கிய நானி படக்குழு

Published On 2023-12-27 12:30 GMT   |   Update On 2023-12-27 12:31 GMT
  • இயக்குனர் விவேக் ஆத்ரேயா புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
  • இதில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது 'அடடே சுந்தரா' இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதில் நானி மற்றும் பிரியங்கா மோகன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


Tags:    

Similar News