சினிமா செய்திகள்

பிரதீப் என்னிடம் மட்டும் தான் அப்படி சொன்னார் என்று நினைத்தேன் - 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி

Published On 2022-11-11 12:20 GMT   |   Update On 2022-11-11 12:20 GMT
  • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘லவ் டுடே’.
  • இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


லவ் டுடே

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


லவ் டுடே

இதையடுத்து 'லவ் டுடே' பட நடிகை ரவீனா ரவி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'லவ் டுடே' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "நீங்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணினால் நன்றாக இருக்கும் என்று பிரதீப் என்னிடம் கேட்டுக் கொண்டார். நம்புங்க நம்பி பண்ணுங்க அப்படினு சொன்னார். நான் என்கிட்ட மட்டும் தான் இப்படி சொன்னார் என்று நினைத்தேன்.


ரவீனா ரவி

ஆனால், அவரோட பர்சனல் வாழ்க்கையில் எல்லாரிடம் இவ்வாறு சொல்லியிருக்கார். இந்த படத்தில் எல்லாவற்றையும் காட்டியிருந்தார். யோகி பாபு சாருடனான என்னுடைய காட்சிகள் மக்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்று நினைத்தேன் அது மாதிரி தான் நடந்தது. மனச பாத்து லவ் பண்றவங்களும் இருக்காங்க சில பேருக்கு புரியும் தோற்றம் சில காலம் தான் இருக்கும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கபோவது கிடையாது" என்று பல விஷயங்கள் பற்றி கூறினார்.



Full View


Tags:    

Similar News