சினிமா செய்திகள்

ரோஜா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி

Published On 2025-11-06 20:53 IST   |   Update On 2025-11-06 20:53:00 IST
  • ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
  • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.

90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையயாக விளங்கிய ரோஜா தற்போது மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.  

ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற ரோஜா தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் திரைப்படம் மூலம் அவரின் கம்பேக் நிகழ்கிறது.

கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.

இந்நிலையில் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். 

Tags:    

Similar News