- சரத்குமார் `ஆழி' படத்தில் நடித்துள்ளார்.
- இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் சரத்குமார் `ஆழி' படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. `ஆழி' படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி மற்றும் ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
888 புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பொன்னு கண்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. இதனிடையே, 'ஆழி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், 'ஆழி' திரைப்படத்தின் டீசர் இன்று (பிப்.4) மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆழி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.