சினிமா
சூரி, விஷ்ணு விஷால்

சூரி கூறுவது பொய்.... விஷ்ணு விஷால் பரபரப்பு அறிக்கை

Published On 2020-10-09 09:28 GMT   |   Update On 2020-10-09 09:28 GMT
சூரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அதனை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீதும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி மனு அளித்தார். இதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சி கரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும். 



"கவரிமான் பரம்பரை என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. 

நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என குறிப்பிட்டு உண்மை ஒருநாள் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News