சினிமா

விஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Published On 2019-05-29 02:42 GMT   |   Update On 2019-05-29 02:42 GMT
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படத்தின் புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகி இருக்கும் நிலையில், படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து சிந்துபாத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். லிங்கா, விவேக் பிரசன்னா, சூர்யா விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வன்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 

படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கும் நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Tags:    

Similar News