சினிமா

விஜய்யும், சூர்யாவும் அமைதியானவர்கள் - பிரபல நடிகை

Published On 2019-03-11 11:33 GMT   |   Update On 2019-03-11 11:33 GMT
விஜய்யும், சூர்யாவும் அமைதியானவர்கள், அளந்து அளந்துதான் பேசுவார்கள் என்று அவருடன் நடித்த பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Vijay #Suriya #ThalapathyVijay
‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. தொடர்ந்து மணல் கயிறு, நேருக்கு நேர் முதலான பல படங்களில் நடித்தார். தற்போது கிருஷ்ணன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:-

’நேருக்கு நேர்’ படத்தில் எனக்கு தம்பியாக சூர்யா நடித்திருந்தார். அதுதான் அவருக்கு முதல் படம். அமைதியாக இருப்பார். அளந்து அளந்துதான் பேசுவார்.



சூர்யாவைப் போலத்தான் விஜய்யும். இருவருமே லேசாகத்தான் சிரிப்பார்கள். ஆனால் இதெல்லாம் கேமராவுக்கு வெளியேதான். கேமராவுக்கு எதிரே வந்து நின்றுவிட்டால், அப்படியொரு நடிப்பை வழங்குவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

நேருக்கு நேர் படம் இப்போது ரீமேக் செய்யப்பட்டால், தனுஷ் நடிக்கலாம். சூர்யா கேரக்டரை கார்த்தி செய்தால், சிறப்பாக இருக்கும்’. இவ்வாறு சாந்தி கிருஷ்ணா தெரிவித்தார்.
Tags:    

Similar News