சினிமா

ராஜமவுலியின் படத்தில் வில்லனாகும் பிரபல தமிழ் நடிகர்

Published On 2019-01-27 06:47 GMT   |   Update On 2019-01-27 06:47 GMT
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #RRR #Samuthirakani
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து வரலாற்று படமொன்றி இயக்கி வருகிறார். ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போதைய தகவல்படி, சமுத்திரக்கனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழு தற்போது சண்டிகர் விரைந்துள்ளது. அந்த சில முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பும் சமுத்திரக்கனி, தான் இயக்கியிருக்கும் நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் பணிகளை தொடர்வார் என்று கூறப்படுகிறது.



முன்னதாக நாடோடிகள் படத்தை பார்த்த ராஜமவுலி, சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் தனது வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தை சந்திக்க அழைப்பு விடுத்ததாக சமுத்திரக்கனி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜமவுலி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ராம் சரணின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடிக்கிறார்கள். #RRR #RamCharan #JrNTR #Samuthirakani

Tags:    

Similar News