சினிமா (Cinema)

தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் - இமான்

Published On 2018-10-30 14:44 GMT   |   Update On 2018-10-30 14:44 GMT
பிரபல இசையமைப்பாளர் இமான், தவறு செய்தவர்கள் தான் மீடூ விசயத்தில் பயப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். #Imman #MeToo
சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை மீடூ இயக்கம் மூலம் பகிரங்கப்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி இசையமைப்பாளர் டி.இமானிடம் கேட்டதற்கு “எந்தத் துறையில்தான் இல்லாமல் இருக்கிறது. திரைத்துறை ஒன்றும் விதிவிலக்கு கிடையாது. ஒரு சில துறைகளில் நடக்கும் போது அது சம்மந்தப்பட்டவர்களோடு முடிந்துவிடுகிறது.

திரைத்துறை என்று வரும் போது அது எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு பூதக்கண்ணாடி போட்டு, ஊடகம் மூலம் எல்லோரிடமும் சொல்கிறோம். அதனால் பூதாகரமாக பார்க்கப்படுகிறது.

ஒரு மனிதனாக நாம் சரியாக இருக்கும் போது எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. அது சரியாக இல்லாத போது வருகிற குழப்பங்கள்தான் இதெல்லாம். என்னதான் மற்றவர்கள் மீது விரல் நீட்டி காட்டினாலும், மீதமிருக்கிற மூன்று விரல் நம்மை நோக்கிப் பாய்கிறது.

எனவே நாம் உண்மையாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தோன்றுகிறது. தவறு செய்தவர்கள்தான் எல்லா வி‌ஷயத்திற்கும் அஞ்ச வேண்டும். தவறு செய்யாமல் உண்மையாக இருப்பவர்களுக்கு மீ டூ என எந்த வி‌ஷயம் வந்தாலும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. தர்மம் எப்போதும் வெல்லும். யார் பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்குண்டான சரியான விடை கிடைக்கும் என நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
Tags:    

Similar News