சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் கார்த்தி

Published On 2018-10-08 12:22 GMT   |   Update On 2018-10-08 12:22 GMT
‘தேவ்’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குடன் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Karthi
கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப். மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான இந்தப் படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.



இந்தப் படம் பாபநாசம் படம் போலவே திரில்லராக தயாராக இருக்கிறது. ஜித்து ஜோசப் இந்தியில் ‘தி பாடி’ என்ற படத்தையும், மலையாளத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு தற்போது ‘தேவ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
Tags:    

Similar News