சினிமா

நடிகை கடத்தப்பட்ட வழக்கு - வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் திலீப்

Published On 2018-06-13 05:46 GMT   |   Update On 2018-06-13 05:46 GMT
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்று திரும்பிய திலீப், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். #ActressAbductionCase #Dileep
பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். 83 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த திலீப், அதில் அடுத்து தான் நடிக்கவிருக்கும் `புரபசர் டிங்கன்' படத்துக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறும், சில நிபந்தனைகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே நேற்று திடீர் என்று வாபஸ் வாங்கிவிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக திலீப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ActressAbductionCase #Dileep
Tags:    

Similar News