ஆட்டோமொபைல்
வால்வோ எலெக்ட்ரிக் கார்

அப்டேட் மூலம் கார்களை மேம்படுத்தும் வால்வோ

Published On 2021-11-01 12:13 GMT   |   Update On 2021-11-01 12:13 GMT
வால்வோ நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஓ.டி.ஏ. முறையில் அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


வால்வோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை ஓவர் தி ஏர் அப்டேட் (ஓ.டி.ஏ.) மூலம் மேம்படுத்துகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்.சி.40 ரிசார்ஜ், 2022 எக்ஸ்.சி.60, 2022 எக்ஸ்.சி.60 ரிசார்ஜ் மற்றும் 2022 எக்ஸ்.சி.60 போல்-ஸ்டார் போன்ற மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்த அப்டேட்- புது அம்சங்களை வழங்குவது, ஏற்கனவே உள்ள சிறு குறைகளை போக்குவது, இன்போடெயின்மென்ட் மற்றும் ப்ரோபல்ஷன் சிஸ்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதன் மூலம் எக்ஸ்.சி.40 மாடலை பயன்படுத்துவோர் 'ரேன்ஜ் செயலி' ஒன்றை எதிர்பார்க்கலாம். இதை கொண்டு வாகனத்தின் ரேன்ஜ்-ஐ நீட்டிக்கவும் முடியும். 



ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் காரின் ரேன்ஜ் எத்தனை கிலோமீட்டர்கள் அதிகரிக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓ.டி.ஏ. அப்டேட் வழங்குவதில் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை பெற்று இருக்கிறது.
Tags:    

Similar News