விற்பனையகம் வந்தடைந்த கிராண்ட் விட்டாரா!
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலாக கிராண்ட் விட்டாரா சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மாடலின் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலாக கிராண்ட் விட்டாரா காரை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா மாடல் நெக்சா விற்பனை மையங்களை வந்தடைய துவங்கி இருக்கிறது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் விலை விவரங்கள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்படலாம். மேலும் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். புதிய கிராண்ட் விட்டாரா மாடலில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
Phooto Courtesy: Carwale
இதே என்ஜின் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்மோக்டு கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கியா செல்டோஸ், போக்ஸ்வேகன் டைகுன், ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், எம்ஜி ஆஸ்டர், டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா விலை ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.