கார்
டொயோட்டா

கர்நாடக அரசுடன் ஒப்பந்தம் - ரூ. 4800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா!

Published On 2022-05-09 10:31 GMT   |   Update On 2022-05-09 10:31 GMT
டொயோட்டா குழும நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசுடன் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.


டொயோட்டா குழுமத்தின் அங்கமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன. 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து உள்ள. இந்த தொகையில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்கின்றன. 



இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் தனது 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது, புதிய வேலை வாய்ப்பு உருவாக்க இந்த முதலீடு வழிவகை செய்யும். 

அதன் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை கட்டமைத்து, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன. இந்த முதலீடு பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு எதிராக மாற்று எரிபொருள் சார்ந்த புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. 

இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகளும் இந்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
Tags:    

Similar News