ஆட்டோமொபைல்
கோப்பு படம்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாருதி ஆல்டோ 2020

Published On 2019-03-18 11:31 GMT   |   Update On 2019-03-18 11:31 GMT
மாருதி சுசுகியின் 2020 மாருதி ஆல்டோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #MarutiAlto2020



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாருதி ஆல்டோ 2020 மாருதியின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மாருதி ஃபியூச்சர் எஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

2020 வெளியீட்டிற்கு முன் புதிய மாருதி ஆல்டோ இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஆல்டோ ஹேட்ச்பேக் கார் பார்க்க எஸ்.யு.வி. போன்ற தோற்றம் பெற்றிருக்கிறது. ஸ்பை புகைப்படங்களின் படி புதிய காரில் ரேடியேட்டர் கிரில், ஹெட்லேம்ப் யூனிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.


புகைப்படம் நன்றி: Teambhp

புத்தம் புதிய வடிவமைப்பு கொண்ட ஆல்டோ கார் முதல்முறை கார் வாங்குவோருக்கு ஏற்றதாக இருக்கும். இதன் வடிவமைப்பு 2020 மாருதி ஆல்டோ மாடலில் அதிக இடவசதியை வழங்குகிறது. காரின் உள்புறம் புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதேபோன்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய வேகன் ஆர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய மாருதி கார் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய மாருதி ஆல்டோவில் புதிய வடிவமைப்பு, புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 2020 மாருதி ஆல்டோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விற்பனை குறைந்து வருகிறது. குறைவான விற்பனை 2019 பொது தேர்தல் நிறைவுறும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News