விருச்சகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

Published On 2025-05-25 11:08 IST   |   Update On 2025-05-25 11:09:00 IST

25.05.2025 முதல் 31.05.2025 வரை

செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் நேரம். ராசிக்கு சூரியன் பார்வை. ஆன்ம பலம் பெருகும். மனம் , உடல் ரீதியான வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். தந்தை மகன் முரண்பாடு முடிவிற்கு வரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிய பெண்களுக்கு ஆண் மகன் பிறக்கும்.

அஷ்டமச் சனியின் காலத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் கவுரவமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும்.

கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்ய வேண்டாம். விவாகரத்து வழக்கு சாதகமாகும். 28.5.2025 பகல் 1.36 மணி முதல் 30.5.2025 பகல் 3.42 மணி வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். அமாவாசையன்று துவரை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News