வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
மாற்றங்கள் நிறைந்த வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும். வதந்திகளால் ஏற்பட்ட அவமானம், சண்டை, சச்சரவுகள், மன உளைச்சல், தூக்கமின்மை போன்ற குறைபாடுகள் அகலும். நேரத்திற்கு சாப்பிட முடியும். கையில் பணம் தங்கும்.
அர்தாஷ்டமச் சனியின் தாக்கத்தால் வேலையை விட்டு விடலாம் என்ற முடிவு எடுத்தவர்களுக்கு வேலையை விட வேண்டிய அவசியம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் உபாதைகள் அகலும். விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்கள் விற்பனையாகும்.
தொழில் தடைகள் அகலும். சிலர் புதிய வேலைக்கு மாறலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கான கடன் தொகையும் கிடைக்கும். தாய் மற்றும் தந்தையின் உதவிகள் கிடைக்கும். பெண்கள் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாறுவார்கள். ஜாமீன் பொறுப்பு ஏற்றவர்களுக்கு கேடான காலம். சிலருக்கு கோவில் சொத்து குத்தகைக்கு கிடைக்கும். திருமண முயற்சி சில நாட்களில் கைகூடும். திருவேற்காடு கருமாரியம்மனை வணங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406