வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
18.05.2025 முதல் 24.05.2025 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சூரியன் பார்வை. அஷ்டம ஸ்தானத்தில் குரு சஞ்சாரம் செய்யும் போது தொழிலில் மிகப் பெரிய ஏற்ற இறக்கத்தை கொடுப்பார். சரக்கு ரெடியாக இருந்தால் ஆர்டர் கிடைக்காது. ஆர்டர் வந்தால் சரக்கு இருக்காது. சரக்கு போட்ட பணம் வசூலாகாது. முதலீட்டை காப்பதில் கவனம் தேவை.
ராகு கேதுக்கள் 4, 10 ம் இடத்தை கடக்கும் வரை அமைதியாக இருந்தால் முதலீடு காப்பாற்றப்படும். கோட்சாரத்தில் நான்காம் இடத்தில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 8ம் பார்வை பதிவதால் எளிதில் சொத்து அமையாது அல்லது வில்லங்கமான வாஸ்து குறைபாடு உடைய சொத்துக்கள் அமையும்.
விவசாயிகளுக்கு அரசின் மானியம் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும். கோட்சார குருவின் பார்வை நான்காமிடத்திற்கு இருக்கும் இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406