கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2026 பங்குனி மாத ராசிபலன்

Published On 2026-03-14 16:32 IST   |   Update On 2026-03-14 16:33:00 IST

கனிவான கடக ராசியினரே

கடக ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சனி, செவ்வாய் புதன் சேர்க்கை ஏற்பட போகிறது. எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள்.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் உள்ளது. அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.உடன் பிறந்தவர்களுடன் தாய் வழிச் சொத்து விஷயத்தில் நிலவிய சலசலப்பு மாறும். புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும். கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதக மாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும்.

புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடை வீர்கள். திருமணத்தடைத் அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.தடைபட்ட குலதெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று மகிழ்வீர்கள்.

உங்களின் குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் உங்கள் வீட்டில் குடியிருந்து அருளாசி வழங்கும்.உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். தந்தையால் ஆதாயம் உண்டு. பூர்வ புண்ணியம் வினைப் படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களையும் நியாயமானதாக இருந்தால் நடந்து விடும். இள வயது கடக ராசியினருக்கு தாய், தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தாத்தா பாட்டி என்ற பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பிறப்பிற்கான மருத்துவம் எடுப்பார்கள்.பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் நிறைய கிடைக்கும். அதிக பணத்தை பார்த்தவுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பணம் ஸ்வாகா தான்.பொருளாதார இழப்பு தொடர்பான வம்பு வழக்கு உண்டாகும்.

குருமங்கள யோகம்

ராசிக்கு 12ம்மிடமான மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானை 5,10ம் அதிபதியான செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். கடக ராசிக்கு 6, 9 ஆம் அதிபதியான குரு பகவானை செவ்வாய் பார்ப்பது நன்மையும் தீமையையும் கலந்த பலனை வழங்கும்.முன் யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். இது வரை எதிரி, போட்டி என்றால் என்னவென்றே தெரியாது இருந்த உங்களுக்கு நண்பர்களே எதிரி என்ற உண்மை புரியும். சுய தொழில் செய்பவர்களுக்கு பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு இடைஞ்சல்களை சந்தித்து கொண்டே இருப்பீர்கள். எனினும் ஆன்மீக சிந்தனை, இறை நம்பிக்கையால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியை நோக்கி செல்வீர்கள்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த விசுவாசமான வேலையாட்கள் ஒதுங்குவார்கள். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு செல்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரிகள் பணிச்சுமையை அதிகரித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள்.

பொருளாதாரம்

அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும் மாதம். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும்.சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

முதலீட்டாளர்கள்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் அதிபர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தடைகள் விலகுவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.தொழிலால் கவுரவம், அந்தஸ்து. கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். அதிருப்தி மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பல புதிய தொழில் முதலீட்டாளர்கள் உருவாகுவார்கள். முன்னோர்களின் பரம்பரை தொழிலை நடத்துபவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி உண்டு. தொழிலை விரிவு படுத்த தேவையான நிதி உதவி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள்

இதுவரை உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். அரசு, தனியார் ஊழியர்கள் வசதி குறைவான ஊருக்கு மாற்றம் செய்யப்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதம் திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலாவும். கட்சி மாறும் எண்ணத்தை கைவிட வேண்டும். முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமூக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க உழைக்க வேண்டும். கட்சிக்காகவும், மக்களுக்காவும்தொண்டர்களுக்காகவும் உழைக்க வேண்டும். தான் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது. பொது நிகழ்ச்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெண்கள்

நியாயமான ஆசைகள் நிறைவேறும் காலம்.திட்டமிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து, கவுரவ பதவி, பதவி உயர்வு போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்கள் மேன்மை அடைவார்கள். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வசிக்கும் வீட்டை விரிவு செய்வீர்கள். வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா பிரச்சனை சீராகும்.தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை கடக ராசிக்கு 7,8ம் அதிபதியான சனி பகவானும் 5,10ம் அதிபதியான செவ்வாயும் பங்குனி 19 (2.4.2026) அன்று பாக்கிய ஸ்தானத்தில் இணைகிறார்கள்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.வேலை பார்க்கும் நிறுவனத்தில் சில அசெளகரியங்கள் நடந்தாலும் முதலாளிக்காக நன்றியுடன் வேலை செய்வீர்கள். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மூத்த சகோதர, சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள்.

பரிகாரம்

வடைமாலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட இனம் புரியாத அனைத்து பிரச்சனைகளிடம் இருந்து விடுபடுவீர்கள்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News