என் மலர்tooltip icon

    கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

    கடகம்

    2025 கார்த்திகை மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுகிறார். எனவே எதிலும் நிதானமும், பொறுமையும் தேவை. விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். உடல்நலத்திலும் அக்கறை காட்டுங்கள். எவ்வளவு தொகை வந்தாலும், அது சேமிப்பாக மாறாது. முயற்சிகளில் தடைகள் ஏற்படும். சனிப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையாகச் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் பதற்றம் வேண்டாம். பணப்பொறுப்பு சொல்லி யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்தால் அதில் சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.

    குரு வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே குரு பார்த்தாலும், சேர்ந்தாலும் கோடி நன்மை என்பதற்கிணங்க தீமைகள் விலக வழிவகுத்துக் கொடுப்பார். கார்த்திகை 2-ந் தேதி முதல் கடக குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. 6-க்கு அதிபதியான அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் 9-ம் இடம் எனப்படும் பாக்கிய ஸ்தானத்திற்கும் குருவே அதிபதி என்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பப் பிரச்சினைகளைக் கவனமுடன் கையாள்வது நல்லது.

    விருச்சிக - சுக்ரன்

    கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஏற்றத் தாழ்வு இல்லாத நிலை வந்து சேரும். உள்ளத்தில் எதை நினைத்தீர்களோ, அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு - செவ்வாய்

    கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் விலகுவர். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். தொழிலில் அதிரடி மாற்றங்களைச் செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

    விருச்சிக - புதன்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை முறையாக பாகப்பிரிவினை செய்துகொண்டு வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்துசேரும். நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வந்துசேரும் நேரம் இது. வருமானம் உச்சம்பெறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எளிதில் கிடைக்கும். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்துசேரும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2025 ஐப்பசி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.

    உச்சம் பெற்ற குரு

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.

    சனி - ராகு சேர்க்கை

    மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.

    விருச்சிக - செவ்வாய்

    ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.

    துலாம் - சுக்ரன்

    ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கடகம்

    2025 புரட்டாசி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வது கடினம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகைவர் களாக மாறலாம். நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செல்லலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் எதிர்வரும் இடர் பாடுகளை அகற்றும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது ஆரோக்கியத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும் செலவழிக்கும் சூழல் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், இப்பொழுது சொந்த வீட்டிற்கு குடியேறும் யோகம் வாய்க்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை தீரும். வருமானம் திருப்தி தரும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    கடக - குரு

    புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சமும் பெறுகிறார். உங்கள் ராசியிலேயே குரு உச்சம் பெறுவது யோகம்தான். 'குரு பார்த்தாலும், சேர்ந்தாலும், இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்' என்பர். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பலம்பெற்ற குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் உயரும். இல்லத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு. இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 'தொழில் தொடங்க முடியவில்லையே' என்ற கவலை இப்போது மாறும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் ஒரு சில நல்ல காரியங்கள் நடந்தேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் மேலோங்கும். இக் காலத்தில் முறையாக வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் முழு வதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்துச் சனி வக்ரம் பெறுவது யோகம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகள் பலரும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவர். பெண் களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 24, 25, அக்டோபர்: 6, 7, 11, 12, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஓரளவிற்கு நன்மை கிடைக்கும் என்றாலும் விரயங்களைக் கட்டுப்படுத்த இயலாது. திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதம் அமையும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், உங்களுக்குரிய பாக்கியங்களும், அனைத்து நலன்களும் வந்துசேரும். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் தடைகள் விலகும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ரண சிகிச்சையில் சிக்கித் தவித்தவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப்போகிறது. மாற்று மருத்துவங்கள் ஒரு சிலருக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அதன் மூலம் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது உடன்பிறப்புகளால் விரயம் ஏற்படும். அவர்களின் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பீர்கள். அல்லது அவர்களின் கல்யாணம் போன்றவற்றை முன்னின்று நடத்த செலவிடுவீர்கள். நாடு மாற்றம் பற்றியும், வீடு மாற்றம் பற்றியும் சிந்திக்கும் நேரம் இது. நாகரிகப் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் பொருளாதார நிலை உயரும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். நல்ல நிகழ்ச்சிகள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம், வியாபாரப் போட்டிகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் உச்சநிலை அடையவும், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தவும், தேக்க நிலையில் இருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29, செப்டம்பர்: 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கடகம்

    2025 ஆடி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். எனவே தனவரவிற்கு குறைவிருக்காது. அதே நேரத்தில் அஷ்டமத்துச் சனியும், வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். குருவின் பார்வை சனி மீது பதிவதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருந்தாலும் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களை திட்ட மிட்டபடி செய்து முடிப்பீர்கள்.

    மிதுன - சுக்ரன்

    ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கத்தான் செய்யும். வீடு மாற்றமும், இடமாற்றமும் வந்துசேரும். மன வலிமை குறையும். எதிர்பாராத செலவுகளால் சில நேரங்களில் தடுமாற்றமும், கைமாற்று வாங்கும் சூழல்களும் உருவாகலாம். அரசு வழிப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால், வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் உண்டு.

    கன்னி - செவ்வாய்

    ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது, மிகுந்த நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியானவர் செவ்வாய் என்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனாக என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை தடையாக இருந்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் உண்டு.

    கடக - புதன்

    ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். சகோதர வழியில் கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகள், உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். சூரியனோடு புதன் இணைந்து 'புத-ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழி வேலைக்காக எடுத்த முயற்சியும் வெற்றி பெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நெருக்கடி நிலை அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு குறையும். கலைஞர்களுக்குப் புதிய பாதை புலப்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரித்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 21, 22, 27, 28, ஆகஸ்டு: 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    2025 ஆனி மாத ராசிபலன்

    கடினமான காரியங்களைகூட முடித்துக் காட்டும் கடக ராசி நேயர்களே!

    ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கிறார்கள். இதன் விளைவாக மிகுந்த பிரயாசை எடுத்தே எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீடித்த நோய் அகன்று மீண்டும் தலை தூக்கும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது.

    கடக - புதன்

    ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் ஜென்மத்திற்கு வரும் பொழுது, நல்ல விரயங்களையே உங்களுக்கு ஏற்படுத்துவார். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்நின்று நடத்தி வைப்பீர்கள்.

    ரிஷப - சுக்ரன்

    ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். வளர்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாட்டு பயண முயற்சி கைகூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் படிப்படியாக நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    செவ்வாய் - சனி பார்வை

    மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை அஷ்டமத்து சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வளர்ச்சியில் குறுக்கீடுகள் வரலாம். வாய்தாக்களும், வழக்குகளும் வந்துகொண்டே இருக்கும். எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நேரமிது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. மாணவ-மாணவியர்களுக்கு மந்தநிலை ஏற்படும். பெண்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை அதிகரிக்கும்.

    இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

    கடகம்

    2025 சித்திரை மாத ராசிபலன்

    பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

    விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை முறியடித்து வெற்றி காண பெரும்முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும். அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால் திட்டமிட்டு எதையும் செய்ய இயலாது.

    திடீர் மாற்றங்கள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. புதிய வழக்குகளும் பிரச்சினைகளும் வந்து சேரும். வீண் பழிகளில் இருந்து விடுபட திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    குரு - சுக்ர பரிவர்த்தனை

    சித்திரை 1-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை குரு-சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாக விளங்கும் குரு பரிவர்த்தனை யோகம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். நினைத்தது நடக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

    கும்ப - ராகு, சிம்ம - கேது

    சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு ராகு சேருவதால் மிக கடுமையான நேரமாக கூட கருதலாம். இந்த சோதனை காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. மன போராட்டமும், பணப்பிரச்சினையும் அதிகரிக்கும். கேது பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் எதிர் காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும்.

    இல்லத்தில் நடக்க வேண்டிய சுபகாரியம் தள்ளிப்போகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கூடுதல் முயற்சி செய்தாலும் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகலாம். கட்டிய வீட்டால் பிரச்சினை, கொடுத்த கடனால் பிரச்சினை உருவாகும் நேரமிது. இக்காலத்தில் சர்ப்ப கிரகங்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    மேஷ- புதன் சஞ்சாரம்

    சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய விரயஸ்தானாதிபதி புதன் என்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும்.

    மிதுன - குரு சஞ்சாரம்

    சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களின் திருமணம் பற்றிய தகவல் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்ற பாதை தென்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கைநழுவி சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஏப்ரல்: 14, 15, 25, 26, மே: 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    கடகம்

    2025 பங்குனி மாத ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொதுவாழ்வில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணங்களால் எண்ணியவை யாவும் நடைபெறும்.

    தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் போதுமான அளவிற்கு பொருளாதாரம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்திலேயே மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். விரயாதிபதி புதன் பலம் இழந்திருப்பது நன்மைதான். எனவே விரயத்திற்கு ஏற்ற வருமானம் வந்துசேரும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வரலாம். அலுவலகப் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பாராத விரயம் உண்டு.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பன்னிரண்டுக்கு அதிபதியான அவர் அஷ்டமத்தில் மறைவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்துசேரும்.

    இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். விரயங்கள் சுபவிரயமாக மாறும் வாய்ப்பு உண்டு. கல்விக்காகவோ, கலை சம்பந்தப்பட்ட வகையிலோ செய்த முயற்சி வெற்றிபெறும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழி அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    மீன - சுக்ரன் வக்ரம்

    மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, சுக-லாபாதிபதியாக விளங்குபவர், சுக்ரன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஜீரணத் தொல்லைகளும், இனம்புரியாத கவலைகளும் மேலோங்கும்.

    எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. குடும்ப பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    கடக - செவ்வாய்

    உங்கள் ராசிக்கு யோகாதிபதியானவர், செவ்வாய். அவர் பங்குனி 24-ந் தேதி, உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்று வலிமை இழக்கிறார். இக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகள், மேலும் தாமதத்தை சந்திக்கும். 'வாகன மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 17, 18, 28, 29, ஏப்ரல்: 2, 3, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    கடகம்

    2025 மாசி மாத ராசிபலன்

    எதிலும் முதலிடம் பிடித்து முன்னேறத் துடிக்கும் கடக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாயும், லாப ஸ்தானத்தில் குருவும் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

    அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அடிக்கடி உடல்நிலையில் தொல்லை உண்டு. திடீர் விரயங்கள் ஏற்பட்டு திகைப்படையச் செய்யும். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியன். அஷ்டமாதிபதியான சனியோடு சேர்ந்திருக்கும் இந்த நேரம், கடுமையான நேரமாகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது. மனபயமும், போராட்டமும், பணக் கவலையும் அதிகரிக்கும்.

    எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. சூரியன் மற்றும் சனி பகவானுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் பலம் பெறும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை வந்துசேரும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.

    இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி புதன் நீச்சம்பெறுவது நன்மைதான். விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், எதிர்பார்த்த ஒரு சில காரியங்களில் தாமதங்களும் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் புதனுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பிறரை நம்பி செயல்படுவதில் கவனம் தேவை.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பாதை புலப்படும். மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 14, 18, 19, மார்ச்: 2, 3, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    கடகம்

    2025 தை மாத ராசிபலன்

    கடகம்

    பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகமான செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. விரயங்கள் அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த புது முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலை உருவாகும். எனவே வாக்கு கொடுக்கும் முன்பு சிந்தித்துக் கொடுக்க வேண்டும்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நல்லதல்ல. கடன் சுமை சங்கிலித் தொடர்போல நீளும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு குறையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பளப் பாக்கிகள் மேலும் தாமதமாகும். தொழில் செய்பவர்கள், பணியாளர்களாலோ, பங்குதாரர்களாலோ ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் செவ்வாய்க்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகளின் திருமண விழாக்கள் சிறப்பாக நடைபெறும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு உதவும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 12-க்கு அதிபதியான அவர், 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரம்தான். இயல்பான வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பதற்கேற்ப, பல நாட்களாக முடிவடையாமல் இருந்த பஞ்சாயத்து இப்பொழுது முடிவிற்கு வரும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் அவர், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். 9-க்கு அதிபதி 11-ம் இடத்தில் பலம் பெறுவதால் வருமானம் உயரும். வளர்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகினாலும், புதியவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, அபரிமிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு மறதி ஏற்படலாம். கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும். எதிர்பாராத வரவு உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 22, 24, பிப்ரவரி: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாக விளங்கும் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

    திடீர் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் குறுக்கீடுகளும் அதிகரிக்கும். பணநெருக்கடியும், கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும்.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக - லாபாதிபதியான சுக்ரனை பார்ப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். மாற்று வைத்தியம் உடல்நலத்தை சீராக்கும். உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

    இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நீண்ட காலமாக பகையாக இருந்த உறவு இப்பொழுது நட்பாக மாறும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பதற்றமும், தடுமாற்றமும் வந்து கொண்டேயிருக்கும். மனக்கசப்பு தரும் தகவல் அடிக்கடி வந்து அலைமோதும். பிள்ளைகளால் பிரச்சினை, பிற வழிகளிலும் மனநிம்மதி குறைவு ஏற்படும் நேரம் இது.

    உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் நடைபெறலாம். தொழிலில் கூட்டாளிகள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். இதுபோன்ற காலங்களில் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளைச் செய்து கொள்வது நல்லது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகாதிபதி சுக்ரன் சனியோடு இணையும் நேரத்தில் செவ்வாயின் பார்வையும் பதிகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தியாக இருக்கும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு இப் பொழுது கிடைக்கலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்தத் தொழிலுக்கு வரும் முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நல்ல மாற்றங்களும் வந்துசேரும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 22, 26, 27, ஜனவரி: 2, 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    கடகம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலு வடைந்திருக்கிறது. எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    திடீர் திடீரென விரயங்கள் வந்து ஆட்கொள்ளும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை உங்கள் கைக்கு வரும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடும் சூழல் உருவாகும். இதுபோன்ற நேரங்களில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வரலாம். நீங்கள் நினைத்த பொருள் கிடைக்காமல் போகலாம். நீண்ட நாளைக்கு முன் தோன்றி மறைந்த நோய், மீண்டும் தலைதூக்கலாம்.

    உத்தியோகத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் தன்வசம் வைத்திருப்பவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. வீண்பழி வரும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் குரு, உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். எதிரிகளின் தொல்லை களால் மனக்கவலை அதிகரிக்கும்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் உள்ளது. இதில் செவ்வாய் பார்வையும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் திடீர் திடீரென சீர்கேடுகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். கடன்சுமை அதிகரிப்பும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரம் இது.

    உத்தியோகமானாலும், தொழிலாக இருந்தாலும் மனம் அதில் ஒருநிலைப் படாது. அடிக்கடி தடுமாற்றமும், இரட்டித்த சிந்தனையும் உருவாகும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்காக வந்துசேரும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந்தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் அமைய நண்பர்கள் உதவி செய்வர்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏட்டில் உள்ள லாபம் எளிதில் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில்தான் எதிலும் வெற்றி பெறமுடியும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 18, 23, 24, டிசம்பர்: 10, 11, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ×