என் மலர்
கடகம் - தமிழ் மாத ஜோதிடம்
கடகம்
2025 ஆனி மாத ராசிபலன்
கடினமான காரியங்களைகூட முடித்துக் காட்டும் கடக ராசி நேயர்களே!
ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கிறார்கள். இதன் விளைவாக மிகுந்த பிரயாசை எடுத்தே எந்த காரியத்தையும் சாதிக்க முடியும். தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீடித்த நோய் அகன்று மீண்டும் தலை தூக்கும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது.
கடக - புதன்
ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் ஜென்மத்திற்கு வரும் பொழுது, நல்ல விரயங்களையே உங்களுக்கு ஏற்படுத்துவார். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி வெற்றிபெறும். திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்நின்று நடத்தி வைப்பீர்கள்.
ரிஷப - சுக்ரன்
ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புனித பயணங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக அமையும். வளர்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அயல்நாட்டு பயண முயற்சி கைகூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் படிப்படியாக நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனியை சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயின் பார்வை அஷ்டமத்து சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வளர்ச்சியில் குறுக்கீடுகள் வரலாம். வாய்தாக்களும், வழக்குகளும் வந்துகொண்டே இருக்கும். எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய நேரமிது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறையும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. மாணவ-மாணவியர்களுக்கு மந்தநிலை ஏற்படும். பெண்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச் சுமை அதிகரிக்கும்.
இம்மாதம் அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
கடகம்
2025 சித்திரை மாத ராசிபலன்
பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். எனவே தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை முறியடித்து வெற்றி காண பெரும்முயற்சி எடுக்கும் சூழல் உருவாகும். அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால் திட்டமிட்டு எதையும் செய்ய இயலாது.
திடீர் மாற்றங்கள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. புதிய வழக்குகளும் பிரச்சினைகளும் வந்து சேரும். வீண் பழிகளில் இருந்து விடுபட திசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை குரு-சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியாக விளங்கும் குரு பரிவர்த்தனை யோகம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். நினைத்தது நடக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். தந்தை வழி உறவில் ஆதாயம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு ராகு சேருவதால் மிக கடுமையான நேரமாக கூட கருதலாம். இந்த சோதனை காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. மன போராட்டமும், பணப்பிரச்சினையும் அதிகரிக்கும். கேது பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் எதிர் காலத்தை பற்றிய பயம் அதிகரிக்கும்.
இல்லத்தில் நடக்க வேண்டிய சுபகாரியம் தள்ளிப்போகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கூடுதல் முயற்சி செய்தாலும் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகலாம். கட்டிய வீட்டால் பிரச்சினை, கொடுத்த கடனால் பிரச்சினை உருவாகும் நேரமிது. இக்காலத்தில் சர்ப்ப கிரகங்களுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
மேஷ- புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய விரயஸ்தானாதிபதி புதன் என்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் மகிழ்ச்சி தரும்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. எனவே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களின் திருமணம் பற்றிய தகவல் முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னேற்ற பாதை தென்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கைநழுவி சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 14, 15, 25, 26, மே: 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
கடகம்
2025 பங்குனி மாத ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கடக ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாய் பலம் பெற்றிருக்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொதுவாழ்வில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணங்களால் எண்ணியவை யாவும் நடைபெறும்.
தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் போதுமான அளவிற்கு பொருளாதாரம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்திலேயே மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். விரயாதிபதி புதன் பலம் இழந்திருப்பது நன்மைதான். எனவே விரயத்திற்கு ஏற்ற வருமானம் வந்துசேரும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் வரலாம். அலுவலகப் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் எதிர்பாராத விரயம் உண்டு.
கும்ப - புதன் சஞ்சாரம்
மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பன்னிரண்டுக்கு அதிபதியான அவர் அஷ்டமத்தில் மறைவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்துசேரும்.
இல்லம் கட்டிக் குடியேறுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். விரயங்கள் சுபவிரயமாக மாறும் வாய்ப்பு உண்டு. கல்விக்காகவோ, கலை சம்பந்தப்பட்ட வகையிலோ செய்த முயற்சி வெற்றிபெறும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழி அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, சுக-லாபாதிபதியாக விளங்குபவர், சுக்ரன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஜீரணத் தொல்லைகளும், இனம்புரியாத கவலைகளும் மேலோங்கும்.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாது. குடும்ப பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும்.
கடக - செவ்வாய்
உங்கள் ராசிக்கு யோகாதிபதியானவர், செவ்வாய். அவர் பங்குனி 24-ந் தேதி, உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்று வலிமை இழக்கிறார். இக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்குகள், மேலும் தாமதத்தை சந்திக்கும். 'வாகன மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தராது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 17, 18, 28, 29, ஏப்ரல்: 2, 3, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடகம்
2025 மாசி மாத ராசிபலன்
எதிலும் முதலிடம் பிடித்து முன்னேறத் துடிக்கும் கடக ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாயும், லாப ஸ்தானத்தில் குருவும் இருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அடிக்கடி உடல்நிலையில் தொல்லை உண்டு. திடீர் விரயங்கள் ஏற்பட்டு திகைப்படையச் செய்யும். சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியன். அஷ்டமாதிபதியான சனியோடு சேர்ந்திருக்கும் இந்த நேரம், கடுமையான நேரமாகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது அரிது. மனபயமும், போராட்டமும், பணக் கவலையும் அதிகரிக்கும்.
எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் பணியாளர்களால் தொல்லை உண்டு. சூரியன் மற்றும் சனி பகவானுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் பலம் பெறும் இந்த நேரம், எல்லா வழிகளிலும் நன்மை வந்துசேரும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.
இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி புதன் நீச்சம்பெறுவது நன்மைதான். விரயத்திற்கேற்ற வரவு வந்துசேரும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
அதே சமயம் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், எதிர்பார்த்த ஒரு சில காரியங்களில் தாமதங்களும் ஏற்படலாம். எனவே இக்காலத்தில் புதனுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பிறரை நம்பி செயல்படுவதில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பாதை புலப்படும். மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 18, 19, மார்ச்: 2, 3, 5, 6, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
கடகம்
2025 தை மாத ராசிபலன்
கடகம்
பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகமான செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. விரயங்கள் அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த புது முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலை உருவாகும். எனவே வாக்கு கொடுக்கும் முன்பு சிந்தித்துக் கொடுக்க வேண்டும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நல்லதல்ல. கடன் சுமை சங்கிலித் தொடர்போல நீளும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு குறையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பளப் பாக்கிகள் மேலும் தாமதமாகும். தொழில் செய்பவர்கள், பணியாளர்களாலோ, பங்குதாரர்களாலோ ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் செவ்வாய்க்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகளின் திருமண விழாக்கள் சிறப்பாக நடைபெறும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு உதவும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 12-க்கு அதிபதியான அவர், 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரம்தான். இயல்பான வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பதற்கேற்ப, பல நாட்களாக முடிவடையாமல் இருந்த பஞ்சாயத்து இப்பொழுது முடிவிற்கு வரும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் அவர், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். 9-க்கு அதிபதி 11-ம் இடத்தில் பலம் பெறுவதால் வருமானம் உயரும். வளர்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகினாலும், புதியவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, அபரிமிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு மறதி ஏற்படலாம். கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும். எதிர்பாராத வரவு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 24, பிப்ரவரி: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடகம்
2024 மார்கழி மாத ராசிபலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாக விளங்கும் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.
திடீர் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் குறுக்கீடுகளும் அதிகரிக்கும். பணநெருக்கடியும், கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும்.
செவ்வாய்- சுக்ரன் பார்வை
கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக - லாபாதிபதியான சுக்ரனை பார்ப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். மாற்று வைத்தியம் உடல்நலத்தை சீராக்கும். உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.
இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நீண்ட காலமாக பகையாக இருந்த உறவு இப்பொழுது நட்பாக மாறும்.
குரு வக்ரம்
உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பதற்றமும், தடுமாற்றமும் வந்து கொண்டேயிருக்கும். மனக்கசப்பு தரும் தகவல் அடிக்கடி வந்து அலைமோதும். பிள்ளைகளால் பிரச்சினை, பிற வழிகளிலும் மனநிம்மதி குறைவு ஏற்படும் நேரம் இது.
உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் நடைபெறலாம். தொழிலில் கூட்டாளிகள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். இதுபோன்ற காலங்களில் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளைச் செய்து கொள்வது நல்லது.
கும்ப - சுக்ரன்
மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகாதிபதி சுக்ரன் சனியோடு இணையும் நேரத்தில் செவ்வாயின் பார்வையும் பதிகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தியாக இருக்கும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு இப் பொழுது கிடைக்கலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரம் இது.
தனுசு - புதன்
மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்தத் தொழிலுக்கு வரும் முயற்சி கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நல்ல மாற்றங்களும் வந்துசேரும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 22, 26, 27, ஜனவரி: 2, 6, 7, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
கடகம்
2024 கார்த்திகை மாத ராசிபலன்
எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலு வடைந்திருக்கிறது. எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
திடீர் திடீரென விரயங்கள் வந்து ஆட்கொள்ளும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை உங்கள் கைக்கு வரும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடும் சூழல் உருவாகும். இதுபோன்ற நேரங்களில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வரலாம். நீங்கள் நினைத்த பொருள் கிடைக்காமல் போகலாம். நீண்ட நாளைக்கு முன் தோன்றி மறைந்த நோய், மீண்டும் தலைதூக்கலாம்.
உத்தியோகத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் தன்வசம் வைத்திருப்பவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. வீண்பழி வரும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் குரு, உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். எதிரிகளின் தொல்லை களால் மனக்கவலை அதிகரிக்கும்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் உள்ளது. இதில் செவ்வாய் பார்வையும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் திடீர் திடீரென சீர்கேடுகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். கடன்சுமை அதிகரிப்பும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரம் இது.
உத்தியோகமானாலும், தொழிலாக இருந்தாலும் மனம் அதில் ஒருநிலைப் படாது. அடிக்கடி தடுமாற்றமும், இரட்டித்த சிந்தனையும் உருவாகும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்காக வந்துசேரும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந்தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் அமைய நண்பர்கள் உதவி செய்வர்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏட்டில் உள்ள லாபம் எளிதில் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில்தான் எதிலும் வெற்றி பெறமுடியும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 18, 23, 24, டிசம்பர்: 10, 11, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடகம்
2024 ஐப்பசி மாத ராசிபலன்
பிறரைப் பார்த்தவுடன் நட்பாகப் பழகிவிடும் கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் உள்ள குருவும் வக்ரம் பெறுகிறார். மாதத்தின் மையப் பகுதியில் சனி வக்ர நிவர்த்தியாவதால், 'அஷ்டமத்துச் சனி' வலுவடைகிறது.
எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். உங்களின் சேமிப்புகள் கரையலாம். யார் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. உத்தியோகத்திலும், தொழிலிலும் புதிய திருப்பங்கள் வந்துசேரும்.
செவ்வாய் நீச்சம்
ஐப்பசி 6-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிறரை நம்பி எடுத்த முயற்சிகளில் ஏமாற்றங்களையே சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் - புதன்
ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற் படக்கூடும். எனவே கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை தீவிரமாகப் பேசி முடிக்கலாம்.
இதன் மூலம் வீண் விரயங்கள், சுப விரயமாக மாறும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டதூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
சனி வக்ர நிவர்த்தி
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இப்பொழுது சனி பலம் பெறுவதால் அஷ்டமத்துச் சனியின் வலிமை கூடுகிறது. எனவே அனைத்து வழிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரித்து, மருத்துவச் செலவை ஏற்படுத்தும்.
இடமாற்றம் இனிமை தருவதாக அமையாது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு - சுக்ரன்
ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, யாரை நம்புவது என்பதே தெரியாத நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவி களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள், தங்களின் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
கடகம்
2024 புரட்டாசி மாத ராசிபலன்
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகும் கடக ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்றாலும், சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.
இருப்பினும் சேமிப்புகள் குறையலாம். திடீர் இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். புதியவர்களை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், அதன் கடுமை குறையும். அதேநேரம் சப்தமாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கும். நிழல் போல கடன் சுமை தொடரும்.
எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்கள் முன்னேற்றத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
புதன் உச்சம்
புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். அவர், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர். சகாய ஸ்தானாதிபதியான புதன் உச்சம் பெறுவது நல்ல நேரம்தான். என்றாலும் விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் வந்துசேரும்.
இது போன்ற காலகட்டத்தில், இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, இடம், பூமி வாங்குவது, கட்டிய மனையை பழுது பார்ப்பது, கல்யாண காரியங்களை முடிப்பது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் பலம் பெற்று இருக்கும்போது, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.
தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பாகப்பிரிவினைகள், பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள், உங்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
துலாம் - புதன்
புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் பலம்பெறும் இந்த நேரத்தில், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அனைத்தும் விலகிச் செல்லும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் தானாக நடைபெறும்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் போட்டிகள் அகலும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும் கிடைக்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுவர். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பச் சுமை கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 19, 23, 24, 30, அக்டோபர்: 1, 5, 6, 16, 17.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
கடகம்
2024 ஆவணி மாத ராசிபலன்
தன்னம்பிக்கையால் தடைகளை அகற்றும் கடக ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.
வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும். சனிக்கிழமை தோறும் சனி பகவான் வழிபாடு நன்மையை வழங்கும்.
சனி - சூரியன் பார்வை
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியனும், அஷ்டமாதிபதியான சனியும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால், தனவரவு தாராளமாக வந்தாலும் விரயங்கள் இருமடங்காக இருக்கும்.
குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், அதன் கடுமை கொஞ்சம் குறையலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.
சுக்ரன் நீச்சம்
ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக் குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு திடீர் திருப்பங்கள் வந்துசேரும். உத்தியோக ரீதியாக வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு, அதில் இருந்த தடை அகலும்.
தாயின் உடல்நலம் சீராகும். வாங்கிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகல, முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
மிதுன - செவ்வாய்
ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் போது, சொத்து விற்பனையும், அதனால் தன லாபமும் கிடைக்கலாம். 'கட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.
ஒரு சிலர் பழைய தொழிலை கைமாற்றி விட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் குடியிருப்பவர்கள், சொந்தக் கட்டிடம் வாங்கிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும்.
சிம்ம - புதன்
ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, நல்ல நேரம்தான். கொடுக்கல்- வாங்கல் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவர்.
கூட்டுத் தொழில் புரிவோர், தனித்து இயங்கும் முயற்சி கைகூடும். பழைய வாகனங்கள் பழுதாவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வர். கலைஞர்கள், தங்கள் பணியில் வரும் சவால்களை சமாளிக்க நேரிடும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்கால கல்வி சம்பந்தமாக முக்கிய முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
கடகம்
ஆடி மாத ராசிபலன்
உதவும் குணத்தால் பிறர் உள்ளத்தைக் கவரும் கடக ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் செயல்படும் இந்த நேரத்தில் பொருளாதார பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வலுவிழந்து இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
குரு - செவ்வாய் சேர்க்கை
மாதத் தொடக்கத்திலேயே குருவும் செவ்வாயும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். 'குரு மங்கள யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ண மாகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கட்டிடங்கள் கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இடமாற்றம் நன்மை தரும்.
புதன்- வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் புதிய வழக்குகள் வரலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் அவற்றால் ஆதாயம் இருக்காது, அலைச்சல் மட்டுமே மிச்சமாகும். உடல்நலனில் கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் கிடைத்து மன வருத்தத்தை உண்டாக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.
சிம்ம - சுக்ரன்
ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது, வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சி கூடும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாக மாறுவர். அதன் விளைவாக கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 25, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
கடகம்
ஆனி மாத ராசிபலன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே இம்மாதம் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும்.
சனி வக்ரம்
ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில், குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் ஒரு சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடாமல் போகலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியாகவும் சனி பகவான் விளங்குவதால், அதற்குரிய வக்ர காலத்தில் தடைபட்டு வந்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். சனியின் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.
கடக - புதன்
ஆனி 12-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் வேளையில் அனைத்து காரியங்களிலும் விரயங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடை அகலும்.
கடக - சுக்ரன்
ஆனி 23-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக - லாபாதிபதியான அவர், உங்கள் ராசிக்கே வருவது நன்மைதான். என்றாலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். ஊதிய உயர்வு கிடைத்தாலும், கணவனும், மனைவியும் வேறு வேறு இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய ஆவணங்களை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அதே போல் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.
ரிஷப - செவ்வாய்
ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். இடம் வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். இக் காலம் ஒரு பொற்காலமாகும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் கவலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதப்படும். மாணவ- மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வழிபிறக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 17, 18, 30, ஜூலை: 3, 4, 10, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.