என் மலர்tooltip icon

    கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

    கடகம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    பிறரைப் பார்த்தவுடன் நட்பாகப் பழகிவிடும் கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் உள்ள குருவும் வக்ரம் பெறுகிறார். மாதத்தின் மையப் பகுதியில் சனி வக்ர நிவர்த்தியாவதால், 'அஷ்டமத்துச் சனி' வலுவடைகிறது.

    எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். உங்களின் சேமிப்புகள் கரையலாம். யார் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. உத்தியோகத்திலும், தொழிலிலும் புதிய திருப்பங்கள் வந்துசேரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிறரை நம்பி எடுத்த முயற்சிகளில் ஏமாற்றங்களையே சந்திக்க நேரிடும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற் படக்கூடும். எனவே கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை தீவிரமாகப் பேசி முடிக்கலாம்.

    இதன் மூலம் வீண் விரயங்கள், சுப விரயமாக மாறும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டதூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இப்பொழுது சனி பலம் பெறுவதால் அஷ்டமத்துச் சனியின் வலிமை கூடுகிறது. எனவே அனைத்து வழிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரித்து, மருத்துவச் செலவை ஏற்படுத்தும்.

    இடமாற்றம் இனிமை தருவதாக அமையாது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர்.

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, யாரை நம்புவது என்பதே தெரியாத நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

    கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவி களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள், தங்களின் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகும் கடக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்றாலும், சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.

    இருப்பினும் சேமிப்புகள் குறையலாம். திடீர் இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். புதியவர்களை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், அதன் கடுமை குறையும். அதேநேரம் சப்தமாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கும். நிழல் போல கடன் சுமை தொடரும்.

    எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்கள் முன்னேற்றத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். அவர், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர். சகாய ஸ்தானாதிபதியான புதன் உச்சம் பெறுவது நல்ல நேரம்தான். என்றாலும் விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் வந்துசேரும்.

    இது போன்ற காலகட்டத்தில், இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, இடம், பூமி வாங்குவது, கட்டிய மனையை பழுது பார்ப்பது, கல்யாண காரியங்களை முடிப்பது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் பலம் பெற்று இருக்கும்போது, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

    தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பாகப்பிரிவினைகள், பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள், உங்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் பலம்பெறும் இந்த நேரத்தில், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அனைத்தும் விலகிச் செல்லும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் தானாக நடைபெறும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் போட்டிகள் அகலும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும் கிடைக்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுவர். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பச் சுமை கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 19, 23, 24, 30, அக்டோபர்: 1, 5, 6, 16, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    தன்னம்பிக்கையால் தடைகளை அகற்றும் கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

    வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும். சனிக்கிழமை தோறும் சனி பகவான் வழிபாடு நன்மையை வழங்கும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியனும், அஷ்டமாதிபதியான சனியும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால், தனவரவு தாராளமாக வந்தாலும் விரயங்கள் இருமடங்காக இருக்கும்.

    குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், அதன் கடுமை கொஞ்சம் குறையலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக் குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு திடீர் திருப்பங்கள் வந்துசேரும். உத்தியோக ரீதியாக வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு, அதில் இருந்த தடை அகலும்.

    தாயின் உடல்நலம் சீராகும். வாங்கிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகல, முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் போது, சொத்து விற்பனையும், அதனால் தன லாபமும் கிடைக்கலாம். 'கட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.

    ஒரு சிலர் பழைய தொழிலை கைமாற்றி விட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் குடியிருப்பவர்கள், சொந்தக் கட்டிடம் வாங்கிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும்.

    சிம்ம - புதன்

    ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, நல்ல நேரம்தான். கொடுக்கல்- வாங்கல் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவர்.

    கூட்டுத் தொழில் புரிவோர், தனித்து இயங்கும் முயற்சி கைகூடும். பழைய வாகனங்கள் பழுதாவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வர். கலைஞர்கள், தங்கள் பணியில் வரும் சவால்களை சமாளிக்க நேரிடும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்கால கல்வி சம்பந்தமாக முக்கிய முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 2, 3, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    கடகம்

    ஆடி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் பிறர் உள்ளத்தைக் கவரும் கடக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் செயல்படும் இந்த நேரத்தில் பொருளாதார பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வலுவிழந்து இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும் செவ்வாயும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். 'குரு மங்கள யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ண மாகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கட்டிடங்கள் கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இடமாற்றம் நன்மை தரும்.

    புதன்- வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் புதிய வழக்குகள் வரலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் அவற்றால் ஆதாயம் இருக்காது, அலைச்சல் மட்டுமே மிச்சமாகும். உடல்நலனில் கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் கிடைத்து மன வருத்தத்தை உண்டாக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது, வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சி கூடும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாக மாறுவர். அதன் விளைவாக கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 25, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    ஆனி மாத ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே இம்மாதம் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும்.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில், குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் ஒரு சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடாமல் போகலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியாகவும் சனி பகவான் விளங்குவதால், அதற்குரிய வக்ர காலத்தில் தடைபட்டு வந்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். சனியின் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் வேளையில் அனைத்து காரியங்களிலும் விரயங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடை அகலும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக - லாபாதிபதியான அவர், உங்கள் ராசிக்கே வருவது நன்மைதான். என்றாலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். ஊதிய உயர்வு கிடைத்தாலும், கணவனும், மனைவியும் வேறு வேறு இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய ஆவணங்களை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அதே போல் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். இடம் வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். இக் காலம் ஒரு பொற்காலமாகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் கவலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதப்படும். மாணவ- மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 17, 18, 30, ஜூலை: 3, 4, 10, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் வகையில் மாதம் தொடங்குகிறது. அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. குருவின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால் இடையூறுகளுக்கு மத்தியில், சில நல்ல பலன்களும் கிடைக்கும். தனாதிபதியான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார பற்றாக்குறை படிப்படியாக தீரும். எதையும் யோசித்து செய்வதன் மூலமே நற்பலன்களைப் பெற முடியும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். குடும்பத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பழைய ஆபரணங்களை கொடுத்து விட்டு புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானாதிபதியான அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். கருத்து வேறு பாடுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கருத்துக்களை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறப்பு களின் திருமண நிகழ்வுகள், உள்ளம் மகிழும் விதம் நடைபெறும். அரசியலில் பிரகாசிப்பவர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாமன் - மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அற்புதமான பலன்கள் வந்துசேரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பிறரிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல், அதனால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நட்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்திற்கு வரும் போது வரவும், செலவும் சமமாகும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். ஊர் மாற்றங்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை விற்று, அதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் சூழ்நிலை உருவாகலாம்.

    அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கை கொடுக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு ஏற்றமும், இறக்கமுமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கலைஞர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு சேமிப்பு கரையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 5, 6, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    பங்குனி மாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், குருவுடன் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்குகிறார். அஷ்டமத்தில் சனியும், செவ்வாயும் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். வருமானப் பற்றாக்குறை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு இதயத்தை வாட்டும். அதிக கவனம் தேவைப்படும் மாதம் இது.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே, கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு யோகம் செய்யக்கூடிய கிரகமான செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு இணைவதால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் போராட்டம் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். நேசக்கரம் நீட்டியவர்கள் விலகிச் செல்வர்.

    எந்த ஒரு புது முயற்சி செய்தாலும் அந்தக் காரியம் முடிவடையும் முன்பாக, மற்றவர்களிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. 'செலவு அதிகரிக்கின்றதே, வருமானம் போதவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென பணிநீக்கம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை சரியாகச் செய்து முடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க வழிபாடு அவசியம்.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகின்றார். ஏற்கனவே அவர் மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால், இப்பொழுது வக்ரம் பெறுகையில் வலிமை இழந்து, சில நல்ல மாற்றங்களை உருவாக்குவார். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். கமிஷன் அடிப்படையில் அமைந்த தொழிலில் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராகும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வரும் நேரம் இது. வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மீனம் -சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தனது உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு எதிர்பாராத விதத்தில் வரலாம். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வீடு, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனக்கலக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண்கள் குறையலாம். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

    மார்ச்: 15, 16, 22, 23, 27, 28, ஏப்ரல்: 8, 9, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    மாசிமாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் வலிமையும் பலவித மாற்றங்களை உங்களுக்கு வழங்கப்போகிறது. யோககாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக்கும். என்றாலும், விரயங்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும். வரும் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தன வரவும் தேவைகேற்ப வந்துசேரும்.

    கும்பம்-புதன்

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மேலும் `விபரீத ராஜயோக' அடிப்படையில், திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றிகளை காணலாம். திடீர் திடீரென பண வரவு வந்து மகிழ்விக்கும். பணம் வந்த உடனேயே செலவாகி விடலாம். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும்.

    மகரம்-சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே மகரத்திற்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக-லாபாதிபதியான சுக்ரனின் பார்வை உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    மீனம்-புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். விரயாதிபதி நீச்சம் பெறுவது நன்மை தான். விரயத்திற்கேற்ற தொகை வந்து சேரும். வீடு மாற்றமும் நன்மை தரும். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதில்லை. காரியத்தை தொடங்கி விட்டால் பணம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.

    கும்பம்-சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள தனாதிபதி சூரியனோடு சேருவதால் தனவரவு திருப்தி தரும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். `வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை-ஆபரண சேர்க்கை உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கலைஞர்களுக்கு கவுரவ பதவி கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
    பிப்ரவரி:
    13, 14, 17, 18, 24, 25,

    மார்ச்: 1, 2, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    கடகம்

    தை மாத ராசிபலன்

    எல்லோரிடமும் எளிதில் பழகும் ஆற்றலைப் பெற்ற கடக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கியிருப்பதால் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. சொந்த வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வரும் விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும் நேரமிது.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பலவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் உண்டு' என்பது பழமொழி. திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் வரலாம். இல்லையேல் இதயத்திற்கு இனிமை தராத விதத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.

    எனவே இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய எடுத்த முயற்சி கைகூடும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் வழங்குவர். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் வருகின்றார். எனவே, `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், விரயாதிபதி புதனும் இணையும் இந்த நேரத்தில் மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்புகள் வரும். தங்கு தடைகள் தானாக விலகும். வீடு கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் உச்சம் பெறுவதால் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. பொருளாதார நிலை உச்சம் பெறும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத் தவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நேரமிது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 21, 22, 28, 29, பிப்ரவரி: 1, 2,

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    மார்கழி மாத ராசிபலன்

    கொள்கைகளை விட்டுக்கொடுக்காத கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இதுவரை கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த உங்களுக்கு இப்பொழுது அஷ்டமத்துச் சனி ஆரம்பிக்கப் போகிறது. எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென பிரச்சினைகளை சந்திக்கும் சூழ்நிலையும், மனக்குழப்பமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடுகள் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலமே உற்சாகத்தோடு பணிபுரிய இயலும்.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சிப் பாதையில் தளர்ச்சியை உருவாக்கப் போகிறது. வருமான பற்றாக்குறை அதிகரிக்கும். எதிரி களின் பலம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது. சனிக்கவசம் பாடி முறையாக சனி பகவானை வழிபடுவதன் மூலம் முன்னேற்ற பாதிப்புகள் ஓரளவு அகலும்.

    விருச்சிக சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் உங்களை விட்டு விலகலாம். தொழில் வளர்ச்சி கருதி முதலீடுகள் செய்ய, வாங்கிய இடத்தை விற்க நேரிடும். அணிகலன்களை அடமானம் வைக்கும் சூழ்நிலைகூட உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் தீவிரமாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

    தனுசு-செவ்வாய்

    மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகளை முறியடிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். குரு வீட்டில் செவ்வாய் இணைவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட சறுக்கல்கள் அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நீடித்த நோய் அகல, மாற்று மருத்துவம் கை கொடுக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று விருப்ப ஓய்வில் வெளிவந்தவர்கள், சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் வருவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். கலைஞர்களுக்கு திடீர் திடீரென வாய்ப்புகள் கைகொடுக்கும். மாணவ, மாணவியர் களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்கள் பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமிது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 24, 25,

    ஜனவரி: 1, 2, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    கடகம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    சிறப்பான வாழ்வமைய சிந்தித்து செயல்படும் கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனி வலுவடைந்து சஞ்சரிக்கின்றார். தொழில் ஸ்தானத்தில் உள்ள குரு வக்ரம் பெறுகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டு. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். அதைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவிட நேரிடும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். எதையும் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலாவிட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி வரும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும் பாக்கிய ஸ்தானம் எனப்படும் 9-ம் இடத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் அவர் வக்ரம் பெறும் பொழுது பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வாகனங்களால் தொல்லைகளும், விரயங்களும் உண்டு.

    அயல்நாட்டு அழைப்புகளை நம்பிச் செயல்படுவதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். சில்லரை கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். என்றாலும், தொழிலை விரிவுசெய்ய பெரிய அளவில் கடன் வாங்கும் சூழல் ஒரு சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற காலங்களில் குரு கவசம் பாடி குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் மாதத்தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே மகிழ்ச்சி கொஞ்சம் குறைவாகவே இருக்கலாம். தாய் வழி உறவினர்களால் தொல்லை உருவாகலாம். சொத்து விற்பனையில் தடுமாற்றங்கள் உண்டு. ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார்.

    துலாம் சுக்ரனுக்கு சொந்த வீடாகும். சுக ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்கலாம்.

    தனுசு- புதன்

    உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்தைப் பார்க்கும் பொழுது விரயங்கள் மேலோங்கும். வீடு மாற்றங்கள், வாகன மாற்றங்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு சென்று தாய்நாடு திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும்.

    உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சியை முன்னிட்டு சுபச்செலவுகள் ஏற்படலாம்.

    கடகம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    பொதுவாழ்வில் புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகைள ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாத தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இப்பொழுது இருக்கின்றது. சனி பகவான் இம்மாதம் வக்ர நிவர்த்தியான பிறகு அதன் கடுமை கொஞ்சம் அதிகரிக்கின்றது. ஆரோக்கியத் தொல்லை, அருகில் இருப்பவர்களால் தொல்லை, வருமானப்பற்றாக்குறை போன்றவைகள் வரலாம். எதையும் நினைத்த நேரத்தில் செய்ய இயலாது.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். சனி உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் வலிமை அடைவதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கும். ெவளிநாடு சென்று பணிபுரிய விரும்பியவர்களுக்கு அங்கு வேலை கிடைக்காமல் தத்தளிக்க நேரிடும். குடும்பப் பிரச்சினை கொடிகட்டிப் பறக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோர்கள் மற்றும் தாத்தா-பாட்டிகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். நீங்கள் கேட்காமலேயே வேறு இடத்திற்கு மாற்றம் செய்வர்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு விளங்குவதால் சில இடையூறு சக்திகளும் வந்து அலைமோதும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழலும் உருவாகும். கவலை என்ற மூன்றெழுத்து அகல கடவுள் வழிபாடு தேவை.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். அசுர குரு நீச்சம் பெறுவது யோகம் தான். இடம், பூமி வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பால் அரிய பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். குழந்தைகளின் மேல்படிப்பு தொடர்பாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் உங்கள் மனதிற்கு பிடித்த விதம் அமையும். கடன் சுமை படிப்படியாகக் குறையும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சினை தலைதூக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 27, 28, நவம்பர் 1, 2, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

    ×