என் மலர்tooltip icon

    கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

    கடகம்

    2025 தை மாத ராசிபலன்

    கடகம்

    பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ் குவிக்கும் கடக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகமான செவ்வாய் உங்கள் ராசியிலேயே நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. விரயங்கள் அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எந்த புது முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலை உருவாகும். எனவே வாக்கு கொடுக்கும் முன்பு சிந்தித்துக் கொடுக்க வேண்டும்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவது நல்லதல்ல. கடன் சுமை சங்கிலித் தொடர்போல நீளும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு குறையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த சம்பளப் பாக்கிகள் மேலும் தாமதமாகும். தொழில் செய்பவர்கள், பணியாளர்களாலோ, பங்குதாரர்களாலோ ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். இக்காலத்தில் செவ்வாய்க்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு 3,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உடன்பிறப்புகளின் திருமண விழாக்கள் சிறப்பாக நடைபெறும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பு உதவும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். 12-க்கு அதிபதியான அவர், 8-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரம்தான். இயல்பான வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடைபெறும். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு' என்பதற்கேற்ப, பல நாட்களாக முடிவடையாமல் இருந்த பஞ்சாயத்து இப்பொழுது முடிவிற்கு வரும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் அவர், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். 9-க்கு அதிபதி 11-ம் இடத்தில் பலம் பெறுவதால் வருமானம் உயரும். வளர்ச்சி கூடும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்துமுடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகினாலும், புதியவர்கள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, அபரிமிதமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு மறதி ஏற்படலாம். கவனம் தேவை. பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும். எதிர்பாராத வரவு உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 22, 24, பிப்ரவரி: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாக விளங்கும் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

    திடீர் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் குறுக்கீடுகளும் அதிகரிக்கும். பணநெருக்கடியும், கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும்.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக - லாபாதிபதியான சுக்ரனை பார்ப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். மாற்று வைத்தியம் உடல்நலத்தை சீராக்கும். உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

    இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நீண்ட காலமாக பகையாக இருந்த உறவு இப்பொழுது நட்பாக மாறும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பதற்றமும், தடுமாற்றமும் வந்து கொண்டேயிருக்கும். மனக்கசப்பு தரும் தகவல் அடிக்கடி வந்து அலைமோதும். பிள்ளைகளால் பிரச்சினை, பிற வழிகளிலும் மனநிம்மதி குறைவு ஏற்படும் நேரம் இது.

    உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் நடைபெறலாம். தொழிலில் கூட்டாளிகள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். இதுபோன்ற காலங்களில் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளைச் செய்து கொள்வது நல்லது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகாதிபதி சுக்ரன் சனியோடு இணையும் நேரத்தில் செவ்வாயின் பார்வையும் பதிகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தியாக இருக்கும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு இப் பொழுது கிடைக்கலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்தத் தொழிலுக்கு வரும் முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நல்ல மாற்றங்களும் வந்துசேரும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 22, 26, 27, ஜனவரி: 2, 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    கடகம்

    2024 கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலு வடைந்திருக்கிறது. எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    திடீர் திடீரென விரயங்கள் வந்து ஆட்கொள்ளும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை உங்கள் கைக்கு வரும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடும் சூழல் உருவாகும். இதுபோன்ற நேரங்களில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

    குரு வக்ரம்

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வரலாம். நீங்கள் நினைத்த பொருள் கிடைக்காமல் போகலாம். நீண்ட நாளைக்கு முன் தோன்றி மறைந்த நோய், மீண்டும் தலைதூக்கலாம்.

    உத்தியோகத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் தன்வசம் வைத்திருப்பவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. வீண்பழி வரும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் குரு, உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தலைதூக்கும். எதிரிகளின் தொல்லை களால் மனக்கவலை அதிகரிக்கும்.

    சனி - செவ்வாய் பார்வை

    கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் உள்ளது. இதில் செவ்வாய் பார்வையும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் திடீர் திடீரென சீர்கேடுகளும், மருத்துவச் செலவுகளும் ஏற்படும். கடன்சுமை அதிகரிப்பும், கடமையில் தொய்வும் ஏற்படும் நேரம் இது.

    உத்தியோகமானாலும், தொழிலாக இருந்தாலும் மனம் அதில் ஒருநிலைப் படாது. அடிக்கடி தடுமாற்றமும், இரட்டித்த சிந்தனையும் உருவாகும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் செலவு இருமடங்காக வந்துசேரும். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    மகர - சுக்ரன்

    கார்த்திகை 18-ந்தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஒளிமயமான எதிர்காலம் அமைய நண்பர்கள் உதவி செய்வர்.

    செவ்வாய் வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். பிள்ளைகளால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏட்டில் உள்ள லாபம் எளிதில் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில்தான் எதிலும் வெற்றி பெறமுடியும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 17, 18, 23, 24, டிசம்பர்: 10, 11, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    பிறரைப் பார்த்தவுடன் நட்பாகப் பழகிவிடும் கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் உள்ள குருவும் வக்ரம் பெறுகிறார். மாதத்தின் மையப் பகுதியில் சனி வக்ர நிவர்த்தியாவதால், 'அஷ்டமத்துச் சனி' வலுவடைகிறது.

    எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். உங்களின் சேமிப்புகள் கரையலாம். யார் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட முடியாது. உத்தியோகத்திலும், தொழிலிலும் புதிய திருப்பங்கள் வந்துசேரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் வருகிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். சொத்து விற்பனை மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களை அனுசரித்துச் செல்லுங்கள். பிறரை நம்பி எடுத்த முயற்சிகளில் ஏமாற்றங்களையே சந்திக்க நேரிடும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் ஒரு பெரும் விரயம் ஏற் படக்கூடும். எனவே கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை தீவிரமாகப் பேசி முடிக்கலாம்.

    இதன் மூலம் வீண் விரயங்கள், சுப விரயமாக மாறும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டதூரத்தில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். உடன்பிறப்புகள் வழியில் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். இப்பொழுது சனி பலம் பெறுவதால் அஷ்டமத்துச் சனியின் வலிமை கூடுகிறது. எனவே அனைத்து வழிகளிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரித்து, மருத்துவச் செலவை ஏற்படுத்தும்.

    இடமாற்றம் இனிமை தருவதாக அமையாது. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர்.

    விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, யாரை நம்புவது என்பதே தெரியாத நிலை உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.

    கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவி களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்கள், தங்களின் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விரயங்கள் அதிகரிக்கும் மாதம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 20, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகும் கடக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்றாலும், சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது.

    இருப்பினும் சேமிப்புகள் குறையலாம். திடீர் இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். புதியவர்களை நம்பி செய்த காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அஷ்டமாதிபதியான அவர் வக்ரம் பெறுவதால், அதன் கடுமை குறையும். அதேநேரம் சப்தமாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப பிரச்சினைகள் அடிக்கடி தலைதூக்கும். நிழல் போல கடன் சுமை தொடரும்.

    எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவீர்கள். தொழில் பங்குதாரர்கள் விலகுவதாக சொல்லி அச்சுறுத்துவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்கமாட்டார்கள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்கள் முன்னேற்றத்தை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். அவர், உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர். சகாய ஸ்தானாதிபதியான புதன் உச்சம் பெறுவது நல்ல நேரம்தான். என்றாலும் விரயாதிபதியாகவும் புதன் இருப்பதால், எதிர்பாராத விரயங்கள் வந்துசேரும்.

    இது போன்ற காலகட்டத்தில், இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, இடம், பூமி வாங்குவது, கட்டிய மனையை பழுது பார்ப்பது, கல்யாண காரியங்களை முடிப்பது போன்ற சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் சுக ஸ்தானத்தில் பலம் பெற்று இருக்கும்போது, நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

    தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பாகப்பிரிவினைகள், பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள், உங்கள் பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியான புதன் பலம்பெறும் இந்த நேரத்தில், தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லைகள் அனைத்தும் விலகிச் செல்லும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் தானாக நடைபெறும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் போட்டிகள் அகலும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும் கிடைக்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுவர். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பச் சுமை கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 19, 23, 24, 30, அக்டோபர்: 1, 5, 6, 16, 17.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    தன்னம்பிக்கையால் தடைகளை அகற்றும் கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.

    வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும். சனிக்கிழமை தோறும் சனி பகவான் வழிபாடு நன்மையை வழங்கும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான சூரியனும், அஷ்டமாதிபதியான சனியும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால், தனவரவு தாராளமாக வந்தாலும் விரயங்கள் இருமடங்காக இருக்கும்.

    குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால், அதன் கடுமை கொஞ்சம் குறையலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். பொருளாதாரப் பற்றாக் குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர் களுக்கு திடீர் திருப்பங்கள் வந்துசேரும். உத்தியோக ரீதியாக வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு, அதில் இருந்த தடை அகலும்.

    தாயின் உடல்நலம் சீராகும். வாங்கிய சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகல, முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் போது, சொத்து விற்பனையும், அதனால் தன லாபமும் கிடைக்கலாம். 'கட்டிய வீட்டை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.

    ஒரு சிலர் பழைய தொழிலை கைமாற்றி விட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் குடியிருப்பவர்கள், சொந்தக் கட்டிடம் வாங்கிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும்.

    சிம்ம - புதன்

    ஆவணி மாதம் 15-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது, நல்ல நேரம்தான். கொடுக்கல்- வாங்கல் சீராகும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவர்.

    கூட்டுத் தொழில் புரிவோர், தனித்து இயங்கும் முயற்சி கைகூடும். பழைய வாகனங்கள் பழுதாவதை முன்னிட்டு, புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வர். கலைஞர்கள், தங்கள் பணியில் வரும் சவால்களை சமாளிக்க நேரிடும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்கால கல்வி சம்பந்தமாக முக்கிய முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 22, 23, 26, 27, செப்டம்பர்: 2, 3, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    கடகம்

    ஆடி மாத ராசிபலன்

    உதவும் குணத்தால் பிறர் உள்ளத்தைக் கவரும் கடக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் தனாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும், புதனும் இணைந்திருக்கிறார்கள். 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் செயல்படும் இந்த நேரத்தில் பொருளாதார பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வலுவிழந்து இருப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும் செவ்வாயும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். 'குரு மங்கள யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் சுபச் செய்திகள் வந்த வண்ண மாகவே இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கல்யாணக் கனவு நனவாகும். கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்போடு சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. கட்டிடங்கள் கட்டும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். இடமாற்றம் நன்மை தரும்.

    புதன்- வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் புதிய வழக்குகள் வரலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்கள் அதிகரிக்கும். ஆனால் அவற்றால் ஆதாயம் இருக்காது, அலைச்சல் மட்டுமே மிச்சமாகும். உடல்நலனில் கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றம் கிடைத்து மன வருத்தத்தை உண்டாக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது, வருமானப் பற்றாக்குறை அகலும். வளர்ச்சி கூடும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாக மாறுவர். அதன் விளைவாக கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் பெண்களுக்கு வெற்றி கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 25, 26, 27, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    ஆனி மாத ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்து சஞ்சரிக்கின்றன. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே இம்மாதம் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஏற்படும்.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில், குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் ஒரு சில காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடாமல் போகலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியாகவும் சனி பகவான் விளங்குவதால், அதற்குரிய வக்ர காலத்தில் தடைபட்டு வந்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். சனியின் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், உங்கள் ராசிக்கு வரும் வேளையில் அனைத்து காரியங்களிலும் விரயங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடை அகலும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு சுக - லாபாதிபதியான அவர், உங்கள் ராசிக்கே வருவது நன்மைதான். என்றாலும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் அல்லவா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே வியாபாரத்தில் பழைய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். ஊதிய உயர்வு கிடைத்தாலும், கணவனும், மனைவியும் வேறு வேறு இடத்தில் பணிபுரியும் சூழல் உருவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய ஆவணங்களை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். அதே போல் பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக விளங்கும் செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். வருமானம் உயரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெருமைக்குரிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புதியவர்களின் அறிமுகத்தால் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். இடம் வாங்குவது, மனை கட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். இக் காலம் ஒரு பொற்காலமாகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் கவலை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதப்படும். மாணவ- மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண் களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வழிபிறக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 17, 18, 30, ஜூலை: 3, 4, 10, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் வகையில் மாதம் தொடங்குகிறது. அதே நேரம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. குருவின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால் இடையூறுகளுக்கு மத்தியில், சில நல்ல பலன்களும் கிடைக்கும். தனாதிபதியான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார பற்றாக்குறை படிப்படியாக தீரும். எதையும் யோசித்து செய்வதன் மூலமே நற்பலன்களைப் பெற முடியும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும். குடும்பத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள், உங்களை விட்டு விலகுவர். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். பழைய ஆபரணங்களை கொடுத்து விட்டு புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகாய ஸ்தானாதிபதியான அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். கருத்து வேறு பாடுகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கருத்துக்களை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறப்பு களின் திருமண நிகழ்வுகள், உள்ளம் மகிழும் விதம் நடைபெறும். அரசியலில் பிரகாசிப்பவர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக, புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாமன் - மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் அற்புதமான பலன்கள் வந்துசேரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பிறரிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல், அதனால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. நட்பை பலப்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்திற்கு வரும் போது வரவும், செலவும் சமமாகும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். ஊர் மாற்றங்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை விற்று, அதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும் சூழ்நிலை உருவாகலாம்.

    அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கை கொடுக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்கள், எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு ஏற்றமும், இறக்கமுமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கலைஞர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு சேமிப்பு கரையும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 21, 22, ஜூன்: 1, 2, 5, 6, 12, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    கடகம்

    பங்குனி மாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், குருவுடன் இணைந்து 'குரு சந்திர யோக'த்தை உருவாக்குகிறார். அஷ்டமத்தில் சனியும், செவ்வாயும் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். வருமானப் பற்றாக்குறை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு இதயத்தை வாட்டும். அதிக கவனம் தேவைப்படும் மாதம் இது.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே, கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு யோகம் செய்யக்கூடிய கிரகமான செவ்வாய், அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியோடு இணைவதால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் போராட்டம் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறாமல் போகலாம். நேசக்கரம் நீட்டியவர்கள் விலகிச் செல்வர்.

    எந்த ஒரு புது முயற்சி செய்தாலும் அந்தக் காரியம் முடிவடையும் முன்பாக, மற்றவர்களிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது. 'செலவு அதிகரிக்கின்றதே, வருமானம் போதவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் திடீரென பணிநீக்கம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளை சரியாகச் செய்து முடிப்பது நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க வழிபாடு அவசியம்.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகின்றார். ஏற்கனவே அவர் மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரிப்பதால், இப்பொழுது வக்ரம் பெறுகையில் வலிமை இழந்து, சில நல்ல மாற்றங்களை உருவாக்குவார். வெளிநாடு செல்லும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். கமிஷன் அடிப்படையில் அமைந்த தொழிலில் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சீராகும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வரும் நேரம் இது. வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மீனம் -சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தனது உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுவதால், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு எதிர்பாராத விதத்தில் வரலாம். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். வீடு, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனக்கலக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீ காரம் கிடைக்காது. கலைஞர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண்கள் குறையலாம். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

    மார்ச்: 15, 16, 22, 23, 27, 28, ஏப்ரல்: 8, 9, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    மாசிமாத ராசிபலன்

    நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் வலிமையும் பலவித மாற்றங்களை உங்களுக்கு வழங்கப்போகிறது. யோககாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே இருக்கும். என்றாலும், விரயங்கள் மட்டும் கொஞ்சம் கூடுதலாகவே காணப்படும். வரும் விரயங்களை சுப விரயங்களாக மாற்றிக்கொள்ள முயற்சிப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தன வரவும் தேவைகேற்ப வந்துசேரும்.

    கும்பம்-புதன்

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மேலும் `விபரீத ராஜயோக' அடிப்படையில், திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றிகளை காணலாம். திடீர் திடீரென பண வரவு வந்து மகிழ்விக்கும். பணம் வந்த உடனேயே செலவாகி விடலாம். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும்.

    மகரம்-சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே மகரத்திற்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக-லாபாதிபதியான சுக்ரனின் பார்வை உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான சூழ்நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    மீனம்-புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். விரயாதிபதி நீச்சம் பெறுவது நன்மை தான். விரயத்திற்கேற்ற தொகை வந்து சேரும். வீடு மாற்றமும் நன்மை தரும். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதில்லை. காரியத்தை தொடங்கி விட்டால் பணம் தானாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள்.

    கும்பம்-சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள தனாதிபதி சூரியனோடு சேருவதால் தனவரவு திருப்தி தரும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். `வாடகை கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று சிந்திப்பீர்கள். ஆடை-ஆபரண சேர்க்கை உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கலைஞர்களுக்கு கவுரவ பதவி கிடைக்கும். மாணவ, மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமே ஆதாயம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
    பிப்ரவரி:
    13, 14, 17, 18, 24, 25,

    மார்ச்: 1, 2, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    கடகம்

    தை மாத ராசிபலன்

    எல்லோரிடமும் எளிதில் பழகும் ஆற்றலைப் பெற்ற கடக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சனி அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கியிருப்பதால் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. சொந்த வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வரும் விரயங்கள் சுபவிரயங்களாக மாறும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதன் மூலம் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும் நேரமிது.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பலவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் உண்டு' என்பது பழமொழி. திசாபுத்தி பலம் பெற்றிருக்குமேயானால் நல்ல மாற்றங்கள் வரலாம். இல்லையேல் இதயத்திற்கு இனிமை தராத விதத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.

    எனவே இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய எடுத்த முயற்சி கைகூடும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் வழங்குவர். தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். பதவியில் இருப்பவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பர். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் வருகின்றார். எனவே, `புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும், விரயாதிபதி புதனும் இணையும் இந்த நேரத்தில் மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்புகள் வரும். தங்கு தடைகள் தானாக விலகும். வீடு கட்டிக் குடியேறும் யோகமும் உண்டு. அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் உச்சம் பெறுவதால் எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. பொருளாதார நிலை உச்சம் பெறும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பாதை புலப்படும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத் தவர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். பெண் களுக்கு குடும்பச்சுமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச்செல்ல வேண்டிய நேரமிது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 17, 18, 21, 22, 28, 29, பிப்ரவரி: 1, 2,

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    ×