search icon
என் மலர்tooltip icon

    கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    மனதில் நல்லதையே நினைக்கும் கடக ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். எனவே தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். நம்பித் தொட்ட காரியங்களில் எல்லாம் நன்மை கிடைக்க வேண்டு மானால், பொறுமையும் நிதானமும் தேவை. அடுத்தவர்கள் பேச்சைக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். அதேநேரம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கத்தான் செய்யும்.

    இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் தொடங்கப் போகிறது. எனவே வளர்ச்சியில் தளர்ச்சி கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். முயற்சி கொஞ்சம் அதிகமாக இருந்தால் மகிழ்ச்சியை ஓரளவேனும் வரவழைத்துக் கொள்ள இயலும். இதற்கிடையில் செவ்வாய் மிதுனத்தில் இருந்தபடியே சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே மற்றவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுது படித்துப் பார்த்துக் கையெழுத்திடுவது நல்லது. தனக்குத் தானே எதிரி என்பது போல, உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு எதிர்ப்புகள் வரலாம். தொழில் வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு சகாய, விரய ஸ்தானாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். முடங்கிக் கிடந்த தொழில் ஆதாயம் தரும். இந்த நேரத்தில் கூட்டாளிகள் தொழிலைக் கைப்பற்றிக்கொள்ள நினைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு இனிமை தராத இடமாற்றங்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வின் காரணமாக, ஒரு சிலர் குடும்பத்தை விட்டுப்பிரிந்து சென்று பணிபுரிய நேரிடலாம். வெளிநாட்டு வாய்ப்புகளை நம்பிச் செல்பவர்கள், அந்த வேலை நிரந்தரமானதாக இருக்குமா? என்பதை அறிந்து செல்வது நல்லது.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி சுக, லாபாதிபதி சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். இல்லத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் நடைபெறலாம். குறிப்பாக வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கை கூடும். பணியாளர்களின் பிரச்சினை படிப்படியாக குறையும். குடும்பத்தினர்களுடன் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வாய்ப்பு, நல்ல நிறுவனங்களில் இருந்து வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரலாம். உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்கள், தானாக வந்து சேர்வார்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். தொழில் முனைவோர், தொல்லை தரும் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவா்கள், மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வந்தாலும், அதனை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம்தான். மாணவ - மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கலாம். விளையாட்டில் உள்ள ஆர்வத்தை படிப்பில் காட்டுவது நல்லது. கருத்து வேறுபாடு அகல, கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இம்மாதம் பைரவர் வழிபாடு வளர்ச்சியைக் கொடுக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:-

    மார்ச்: 22, 23, 26, 27, ஏப்ரல்: 2, 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    நல்லது செய்ய வேண்டுமென்று நினைக்கும் கடக ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சனியோடு இணைந்து புதன் சஞ்சரிக்கிறார். 3, 12-க்கு அதிபதியான புதன் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது பயணங்கள் அதி கரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். உடன்பிறப்புகளின் வழியில் ஒரு நல்ல காரியம் நடைபெறும். குருவின் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெறும்பொழுது புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவோடு பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்போது இருக்கும் நிறுவனத்தில் இருந்தே, ஒருசில மாதங்கள் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், அஷ்டமத்தில் மறைவது யோகம்தான். 12-க்கு அதிபதி 8-ல் மறைவதால் திடீர் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் உண்டு. சகோதர வழியில் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுப காரியங்களை முன்நின்று நடத்தி வைப்பீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

    மீன - புதன் சஞ்சாரம்

    மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 12-க்கு அதிபதி நீச்சம்பெறுவது யோகம்தான். விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம் உறுதியாகலாம். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டி வெற்றி காண்பீர்கள்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 10-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதற்குத் தேவையான முதலீடுகளை வழங்க, நண்பர்கள் உதவியாக இருப்பர். இடம் வாங்கி மனை கட்டும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உறவினர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை காத்திருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறும் அதே நேரத்தில், செவ்வாயின் பார்வை சனியின் மீதும் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. வீண் விரயங்கள் அதிகரிக்கும். மன அமைதி குறையும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.

    இம்மாதம் சூரிய வழிபாடு சுகத்தை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 13, 23, 24, 27, 28, மார்ச்: 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    வேகமும், விவேகமும் கொண்டு செயல்படும் கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9-ல் குருபகவான் வீற்றிருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தடைப்பட்ட காரியங்கள் இனி தானாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் அதே நேரம் கண்டகச்சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. எனவே எவ்வளவுதான் பணம் வந்தாலும் சேமிக்க இயலாது.

    புதன் வக்ர இயக்கம்

    உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். 12-ம் இடத்திற்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது பயணங்கள் பலன் தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவிடும் சூழ்நிலை உருவாகும். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நல்லவிதமாக அமையும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அங்குள்ள சனியோடு சுக்ரன் சேருவதால் குடும்பத்தில் சில காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரலாம். புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். இதுவரை முடிவெடுக்க முடியாத சில பிரச்சினைகளுக்கு, நல்ல தீர்வு கிடைக்கும். தாய் வழி ஆதரவு உண்டு. ஆன்மிகப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், மார்கழி 24-ந் தேதி வக்ர நிவர்த்தியாவதால் விரய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே விரயங்கள் கூடும். அதனால் சுப காரியங்களுக்கு செலவு செய்து, சுப விரயமாக மாற்றிக்கொள்ளுங்கள். கொடுக்கல் - வாங்கல்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெற மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் மார்கழி 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு.

    செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சம்பளம் உயர்ந்து சேமிப்பை அதிகரிக்கும் எண்ணங்கள் கைகூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பரவசப்படுத்தும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி வாங்குவதில் அக்கறை கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூமி விற் பனையால் லாபம் உண்டு. குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 30, 31, ஜனவரி: 4, 5, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    கடகம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொண்டு செயல்படும் கடக ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் செவ்வாயால் பார்க்கப்பட்டு சந்திர மங்கள யோகத்தை உருவாக்குகின்றார். அதே நேரத்தில் அஷ்டமத்தில் குரு பகவான் அடியெடுத்து வைக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கமும் பலமாக இருக்கின்றது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நேரமிது.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை மாதம் 20-ந் தேதி வரை செவ்வாய்-சனி பார்வையிருக்கின்றது. சனியின் பார்வை செவ்வாயின் மீதும், செவ்வாயின் பார்வை சனியின் மீதும் பதிகின்றது. இது அவ்வளவு நல்லதல்ல. திடீர் தாக்குதல்களும், மனக்கசப்பு தரும் தகவல்களும் வரலாம். உதவுவதாக உறுதி சொன்னவர்கள் கூட கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் சகோதரர்களால் நன்மை ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு ெவளிநாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். ஆயினும் அஷ்டமத்துக் குருவின் ஆதிக்கம் இருப்பதால் சுயஜாதகத்தை ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுத்துக் கொள்வதே நல்லது.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியும், லாபாதிபதியும் சேரும் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் அமைப்பு உண்டு. வாகனத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது இப்பொழுது கைகூடும். பெண் வழிப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களுக்குக் கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகள் விலக நேரிடும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாயாகும். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் புதிய திருப்பங்களைக் காணப்போகிறீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணையலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் மாற்றப்படும். பணி ஓய்வு பெற்றவர்கள் கூட மீண்டும் பணியில் சேர வாய்ப்புக் கிட்டும். சிவன் வழிபாடு சிறப்புகளை வழங்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 22, 23, 29, 30, டிசம்பர்: 3, 4, 5, 12, 13

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    பிறரை பார்த்தவுடன் எடைபோடும் வல்லமை பெற்ற கடக ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவர் மீது குருவின் பார்வை பதிகிறது. எனவே பொருளாதார முன்னேற்றமும், புதிய திருப்பங்களும் ஏற்படும்.

    துலாம் - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 2-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். அதிலும் தனாதிபதி சூரியனோடு சுக்ரன் இணைவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    துலாம் - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 6-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து வெற்றிக்கொடி பிடிப்பீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். புத ஆதித்ய யோகமும், புத சுக்ர யோகமும் இருப்பதால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பழைய கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியாகும்.

    மிதுன - செவ்வாய் வக்ரம்

    மாதத் தொடக்கத்தில் மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அதோடு ஐப்பசி 18-ந் தேதி செவ்வாய் வக்ரமும் அடைகிறார். எனவே மருந்தளவிற்கு கூட மனநிம்மதி இருக்காது. வாழ்கைத் துணையோடு பிரச்சினை வரலாம். ஆதாயம் தரும் தகவல்கள் குறையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். 'பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை. பணிபுரிபவர்கள் தங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும்.

    விருச்சிக - புதன் சஞ்சாரம்

    ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். குரு பார்வையும் பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

    விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்

    ஐப்பசி 26-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது நல்ல பலன்களை வழங்குவார். குறிப்பாக வீடு, இடம் வாங்கும் யோகம், உயர்ந்த மனிதர்களின் அரவணைப்பு, பிள்ளைகளின் திருமண முயற்சி போன்றவை கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள், மின்சாதனங்கள் போன்றவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

    குரு வக்ர நிவர்த்தி

    உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே இனி அவரது பார்வைக்கு பலம் அதிகம் கிடைக்கும். உங்கள் ராசியை குரு 5-ம் பார்வையாக பார்ப்பதால், பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் ஆதரவோடு பெருமை காண்பீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 21, 22, 25, 26, நவம்பர்: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    18.9.22 முதல் 17.10.22 வரை

    வேகமும், விவேகமும் கொண்டு செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் விரய ஸ்தானத்திலும், விரயாதிபதி புதன் தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள்.

    கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் அவர், அங்கு நீச்சம் பெறுகிறார். இதனால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பிரியமானவர் களுடன் இருந்த நட்பு பகையாகலாம். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் தேவை. கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதாலும், சுக ஸ்தானத்தில் சுக்ரன் நீச்சம் பெறுவதாலும், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படும்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    புரட்டாசி 16-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். அங்கு அவர் உச்சம் பெறுகிறார். மேலும் அங்குள்ள சூரியனுடன் புதன் இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வழக்குகள் சாதகமாகும். வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிகார வர்க்கத்தினர் உறுதுணையாக இருப்பர். சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5,10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகள் வழியில் விரயம் ஏற்படலாம். மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் கடல்தாண்டிச் செல்லும் யோகம் தடைபடலாம். வாழ்க்கைத் துணையோடு போராட்டங்களும், வாங்கல்-கொடுக்கல்களில் பிரச்சினைகளும் ஏற்படும். இக்காலத்தில் தெய்வ வழிபாடு அவசியம் தேவை.

    சனி வக்ர நிவர்த்தி

    புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே கண்டகச் சனியின் ஆதிக்கம் கொஞ்சம் வலிமையடைகிறது. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் மனக்கலக்கம் அதிகரிக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் பேசி முடித்திருந்தாலும் அது கைநழுவிப் போகலாம். ெவளிநாட்டு பயணத்தில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழியே பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகவே தெரியும். மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 23, 24, 29, 30, அக்டோபர்: 9, 10, 13, 14.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு கூடும். கண்டகச் சனி ஆதிக்கம் இருப்பதால் எதையும் யோசித்து செய்வதுநல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடும் சூழல் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் உருவாகலாம்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    புகழ்பெற்ற மனிதர்களாக பூமியில் வாழ விரும்பும் கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன ஸ்தானத்தில் தனாதிபதி சூரியனும், விரயாதிபதி புதனும் இணைந்திருப்பதால் வரவும், செலவும் சமமாகும். குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், இந்த மாதம் முழுவதும் அதே இடத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே தன ஸ்தானம் வலுப்பெற்று, பணத் தேவை பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே நடத்தி வைப்பீர்கள். அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் புதன் அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால், சில நன்மைகளும் நடைபெறும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். இதன் விளைவாக 'புத ஆதித்ய யோகம்' செயல்படும். விரயாதிபதி புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் சில தடைகளும், தாமதங்களும் வந்துசேரும். ஒரு சிலருக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வரும் போது அசையாச் சொத்து வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். அதேசமயம் தந்தைவழி உறவில் விரிசல் வரலாம். பூர்வீக சொத்துப் பிரச்சினை நீடிக்கும். சனியின் வக்ர இயக்க காலத்தில், குடும்பம் ஒற்றுமையாக இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். எதையும் திட்டவட்டமாகச் செய்ய இயலாது.

    இந்த மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட்டால் சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 19, 20, 27, 28, 31, செப்டம்பர்: 1, 12, 13, 16, 17மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் இருப்பதால், வரவும், செலவும் சமமாகவே இருக்கும். தனாதிபதி சூரியன் தன ஸ்தானத்திலேயே இருப்பதால் காரியங்கள் கைகூடும். கடைசி நேரத்தில் பணத்தேவை பூர்த்தியாகும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    எதிர்காலத்தைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் கடக ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை குரு பார்ப்பதால் பிரச்சினைகள் படிப்படியாக தீரும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் போது விரயத்திற்கேற்ற வருமானம் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நல்ல நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம்.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கும் பொழுது பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வாங்கல் - கொடுக்கல் ஒழுங்காகும். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தடைப்பட்ட பத்திரப் பதிவு துரிதமாக நடைபெறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். 6-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், அவர் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் ஒருசில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உறவினர் பகை அதிகரிக்கும். மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய நேரம் இது. 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருக்கிறார், குரு பகவான். மறைவிடத்திற்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இனிமை தரும். கடனை செலுத்தி நிம்மதி காண்பீர்கள். தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார விருத்தி, உற்சாகத்துடன் செயல்படும் தன்மை, தொழில் முன்னேற்றம், பயணங்களால் பலன், இளைய சகோதரத்துடன் இணக்கம், கடல் வணிகத்தால் மேன்மை தோன்றும். தட்டுப்பாடுகளும், முட்டுக்கட்டைகளும் அகலும்.

    இம்மாதம் திங்கட்கிழமை தோறும் கற்பக விநாயகரை வணங்குங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 19, 20, 24, 25, 31, ஆகஸ்டு: 1, 5, 6, 15, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் மீன குருவின் பார்வையால் சிறப்பான வாழ்க்கை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் பாசம், அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்பட்டாலும், மேலிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    எதிரிகளை பேச்சாற்றலால் தன்வசமாக்கிக் கொள்ளும் கடக ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். எனவே தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். எதையும் தீர்க்கமாக முடிவெடுத்துச் செய்ய இயலாது.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். லாபாதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார விருத்தி ஏற்படும். சுக ஸ்தானாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பூமிப் பிரச்சினை அகலும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் புதிய தொழில் வாய்ப்புகளும் வந்து சேரும்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்குப் புதன் செல்கிறார். விரயாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் மேற்படிப்பு அல்லது வேலைவாய்ப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும்.

    ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். தக்க விதத்தில் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுய தொழில் செய்வது பற்றி சிந்திப்பர். 10-ம் இடத்தில் செவ்வாய் பலம்பெற்றிருக்கும் இந்த நேரத்தில், எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. கட்டிடம் கட்டும் வாய்ப்பு, கடைதிறப்பு விழா போன்றவை நடைபெறும்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். விரயாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயங்கள் கூடும். வீடு மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம், வாகன மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் வரும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது, அங்குள்ள புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே நிலம், பூமியால் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும்.

    இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 22, 23, 27, 28, 30, ஜூலை: 3, 4, 5, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் குரு பார்வை இருப்பதால் மனக்குழப்பம் அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம், வீட்டில் அமைதி நிலவும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படலாம். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    கடகம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் வெற்றிபெறும் கடக ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் செவ்வாயும், சப்தமத்தில் சனியும் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் எப்படியாவது கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர், பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உடன்பிறப்பு களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினை, சொத்து பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். விரயத்தால் மன நிம்மதி குறையும். வாங்கிய சொத்துக்களை விற்கக்கூடிய நிர்பந்தம் உருவாகும். ஆரோக்கியம் பாதிக்கும்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். வழக்குகள் சாதகமாக அமையும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விலகுவர். சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புதிய கிளைத் தொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். கூட்டுத் தொழில்புரிவோர், கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் வீண்பழி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனப் பழுது வாட்டம் தரும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

    இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 15, 16, 24, 25, 30, 31, ஜூன்: 4, 5மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் கண்டகச் சனியும், அஷ்டமத்துச் செவ்வாயும் இருப் பதால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். மனக்குழப்பம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் பிரச்சினைகள் வரலாம்.

    ×