கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:35 IST   |   Update On 2025-12-14 08:36:00 IST

கடக ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.

உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

Similar News