ஆன்மிக களஞ்சியம்

சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

Published On 2023-09-03 09:34 GMT   |   Update On 2023-09-03 09:34 GMT
  • அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.
  • இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

சஷ்டி திதியில் சூரபத்மனை அழித்த முருகப் பெருமான்

இங்கிருந்து முருகப் பெருமான் வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி நல்ல அறிவுரைகளைக் கூறச் சொன்னார்.

ஆனால் வீரவாகுவின் பேச்சினை சூரபத்மன் கேட்கவில்லை.

அவன் மீது போர்தொடுத்தார். பெரும் யுத்தகம் ஆரம்பமானது.

முருகப் பெருமானின் பூதசேனைகளும், சூரனின் அசுர சேனைகளும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். சூரபத்மனின் பிள்ளைகளான பானுகோபன், இரணியன், அக்னிமுகம் மற்றும் தம்பியான சிங்கமுகாசுரன் ஆகியோர் முருகப்பெருமானிடம் போரிட்டு மடிந்தனர்.

கடைசியாக திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார்.

இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News