ஆன்மிக களஞ்சியம்

மேல் மலையனூர்-27 வெள்ளிக் கிழமைகளில் சனி ஓரையில் வழிபாடு!

Published On 2023-08-27 10:44 GMT   |   Update On 2023-08-27 10:44 GMT
  • மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.
  • என் வாழ்வில் ஒளியேற்று!’ என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

27 வெள்ளிக் கிழமைகளில் சனி ஓரையில் வழிபாடு

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் வெற்றிக்குத் துணை நிற்கும் தெய்வமாவாள்.

தொடர்ந்து 27 வெள்ளிக்கிழமை அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு சென்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்

அதாவது சனி ஹோரையில் , 18 எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையிட்டு, 9 எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் இட்டு, 18 தீபமிட்டு வழிபட்டு வந்தால்,

தோல்வியைத் தரும் தோஷம் விலகி ஓடிவிடும்.

வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

இந்த பரிகார பூஜை செய்யும் போது தீபமேற்றி அங்காள பரமேஸ்வரி தாயே! எனக்கு வெற்றியை நீ மட்டுமே தர முடியும்.

என் வாழ்வில் ஒளியேற்று!' என மனமுருகி வேண்டி கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News