ஆன்மிக களஞ்சியம்

மன்மதன் உயிர்பெற்ற திருநாள்

Published On 2023-09-27 10:43 GMT   |   Update On 2023-09-27 10:43 GMT
  • சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
  • இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கப்பூர்வ மாக உதவுபவன் காமன் ஆகிய மன்மதன்.

இவனது மனைவி ரதி. ஒரு சமயம் மன்மதன் தேவர்கள் வேண்டுகோளின்படி தன் மனைவியைப் பிரிந்து வந்து தியானத்தில் இருந்த

சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.

இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தம் நெற்றிக் கண் அக்னியால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.

இதையே காமதகனம் என்பர்.

தன் கணவனின் மரணத்தை அறிந்து வருந்திய ரதி ஓடோடி வந்து சிவபெருமானை வேண்டி, மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.

அவள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக காமனை உயிர்ப் பெற்று எழச்செய்தார்.

இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.

அன்று மன்மதன் ரதியை வழிபடுவோருக்கு சிவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News