ஆன்மிக களஞ்சியம்

மாரியம்மன் மருந்து

Published On 2023-10-03 10:39 GMT   |   Update On 2023-10-03 10:39 GMT
  • அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும்.
  • பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது.

மாரியம்மன் கோவில்களில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளியன்று கஞ்சி வைத்து வணங்குவார்கள்.

இதை எப்படி வைப்பதென தெரிந்து கொள்ளுங்கள்.

"ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்' எனும்போது, தூசு பறப்பது எம்மாத்திரம்? இதனால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும்.

இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் கஞ்சி வைக்கிறார்கள்.

இதை "ஆடிக்கஞ்சி' என்பர்.

அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னிவேர், உழிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்

ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இவற்றை அரை குறையாக தட்டியெடுத்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை கஞ்சியாக வேக வைத்து அதில், துணியில் கட்டிய மருந்தை 15 நிமிடம் போட்டு விட வேண்டும்.

பின்னர், இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. இருமல், தொற்றுநோய் வராது.

கோவில் நிர்வாகங்கள் இதற்குரிய ஏற்பாட்டை செய்யலாம்.

Tags:    

Similar News