ஆன்மிக களஞ்சியம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்-திருவிழாக்கள்

Published On 2023-09-24 13:06 GMT   |   Update On 2023-09-24 13:06 GMT
  • குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.
  • பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.

இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.

ஆண்களுக்கும் இது பொருந்தும்.

குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.

பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

நேர்த்திகடன்:

அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்) புடவை சாத்துதல், பால் அபிசேகம், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம்.

Tags:    

Similar News