ஆன்மிக களஞ்சியம்

குழந்தை வரம் அருளும் வளையல் பிரசாதம்!

Published On 2023-11-03 12:37 GMT   |   Update On 2023-11-03 12:37 GMT
  • ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்கள் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம்.

இந்தத் திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம்,

வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோவில் மற்றும்

திருவண்ணாமலை கோவில்களில் பத்து நாட்களும்,

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும்.

இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலை பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால்,

அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில்

குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News