ஆன்மிக களஞ்சியம்

கற்பக விருட்சம் போல் பலன் தரும் வாஞ்சா கல்ப கணபதி

Published On 2023-10-21 11:15 GMT   |   Update On 2023-10-21 11:15 GMT
  • வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.
  • மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

விநாயக பூஜா விதிகளில் நாம் காணுகின்ற அடிப்படை பூஜை முறைகள் எல்லாம்

காலத்திற்கேற்ப பலன் கிடைப்பதாக பக்தர்கள் சொல்வதால் சிறு தெருக்களில் கூட விநாயகர் சன்னதிகள் சிறிது சிறிதாக உருவாகி உள்ளன.

அவற்றுள் வாஞ்சா கல்பகணபதி என்பவர் வேதம், ஆகம பூஜா விதிகள் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்பெல்லாம் தெரிந்த ஒன்றாக இருந்தது.

ஆனால் இக்காலத்தில் வாஞ்சா கல்பகணபதி வழிபாடு பலருக்கும் தெரிந்த ஒன்றாக மாறியுள்ளது.

வாஞ்சா என்பதற்கு மன விருப்பங்கள் என்றும் பரிவு, பாசம் என்றும் பொருள் உண்டு.

கல்ப என்பதற்கு நாம் வணங்கினால் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் நம்மைக் காக்கின்ற என்றும் பொருள்.

மனவிருப்பங்களை நிறைவேற்றும் இவரது உருவமும் சற்று வித்தியாசமான ஒன்று.

பன்னிரு கைகளில் முறையே தாமரை, பாசம், நீலோத்பலம், நெல், தந்தம், சங்கிலி, அபயம், மாதுளை, தண்டம், கரும்பு, சூலம், சக்கரம்,

ஆகியவற்றுடன் தங்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண் உருவைக் காட்டியவராய் ஜடாமகுடம் தரித்தவராய்க் காட்சி தருகிறார்.

முதல்முதலாக இந்த சக்திவாய்ந்த மூலமந்திரம் திபெத்திய மொழியில் வெளியிடப்பட்டு வந்தது.

நம் நாட்டில் குமார சம்ஹதை ப்ரோயக பாரிஜாதம் ஆகிய கிரந்தங்களில் விளக்கங்களோடு உள்ளது.

இம்மந்திரத்தில் நலம் கொடுக்கும் ஐந்து மூர்த்தங்களின் மூலம் சேர்ந்திருக்கிறது.

மகாகணபதி, மகா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யாகணபதி, அமிர்த ருத்ரேரஸ்வரர்சம்வாதாக்னி ஆகியோருடையதும் இவர்களின் வேத மந்திர பீஜங்களோடு கணபதி மூலம் பஞ்சதசாட்சரி மூலம் காயத்ரி மந்திரங்கள் உபதேவதை மந்திரங்களோடும் உள்ளது.

இவற்றை குரு உபதேசம் பெற்றுக் கொண்டபின் செய்வதால் உச்சரித்த சில தினங்களுக்குள் பலன் கொடுக்கும் என்பது வேத வித்வான்களின் கருத்து.

மூல மந்திர ஜபம் 4 பகுதிகளாக (பர்யாயங்களாக ) பிரிக்கப்பட்டிருக்கும், அதை கவனமாக மனவிருப்பங்களுக்கு ஏற்ப படிக்க வேண்டும்.

Tags:    

Similar News