ஆன்மிக களஞ்சியம்
null

அம்பாளை பாதுகாக்கும் நந்தி

Published On 2023-10-14 18:06 IST   |   Update On 2023-10-17 11:51:00 IST
  • இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.
  • இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.

ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது.

அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை.

ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள்.

அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார்.

இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.

பிரமாண்டமான மணிகள்

திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3 மணிகள் உள்ளன.

அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது.

மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.

இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News