search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வரலட்சுமி விரதம்
    X

    வரலட்சுமி விரதம்

    • அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.
    • கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    விஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியை குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும்.

    விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்.

    லட்சமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள்.

    விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க,

    உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.

    தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் வரலட்சுமி விரதம் அனுஷ்டிகின்றனர்.

    லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள்.

    இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள்.

    ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள்.

    தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதென கருதி நடந்தாள்.

    இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்,

    தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    மகாலட்சுமியை எட்டு அஷ்ட லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

    எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.

    லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது.

    அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

    கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்.

    பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

    வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.

    ஆடி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக் கிழமையில் அதாவது நாளைய தினம் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சுமங்கலிகள் அனுஷ்டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது.

    இதை செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.

    கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

    Next Story
    ×