search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவபாஷாண முருகன்
    X

    நவபாஷாண முருகன்

    • பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
    • மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.

    இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .

    இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.

    அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×