search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முத்தேவியருடன் தங்கத்தேர்
    X

    முத்தேவியருடன் தங்கத்தேர்

    • பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.
    • மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    நிறைமணி தரிசனம்

    பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.

    ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

    புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தவ மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர்.

    இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    முத்தேவியருடன் தங்கத்தேர்

    தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரசுவதி, இலக்குமி மூவரும் உலா வருகின்றனர்.

    சப்தமாதர்களில் ஒருத்தியான பிராம்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள்.

    தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர்.

    மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    இதற்கு இடதுபுறம் தவ காமாட்சி சன்னிதி உள்ளது.

    Next Story
    ×