search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இறைவனை நோக்கி இறைவனே தவமிருக்கும் இரகசிய ஆலமரம்
    X

    இறைவனை நோக்கி இறைவனே தவமிருக்கும் இரகசிய ஆலமரம்

    • திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.
    • ரமண மகிரிஷிக்கு ஒரு முறை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.

    அங்கு அருணாசலேஸ்வரரே ஆழ்ந்த தவத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.

    அதாவது இறைவனை நோக்கி இறைவனே தவம் இருக்கும் அதிசயம் இத்தலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    ரமண மகிரிஷிக்கு ஒரு தடவை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    உடனே அவர் வட சிகரத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றார்.

    அப்போது நிறைய குளவிகள் கொட்டி அவரை விரட்டி விட்டன.

    இதனால் ரமணர் அந்த ஆல மரத்தை பார்க்க இயலாமல் திரும்பினார்.

    யாராலும் பார்க்க முடியாதபடி அந்த மரம் உள்ளதாம்.

    அங்கே நிறைய சித்தர்கள் இப்போதும் தவம் புரிவதாக ரமணர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×