search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாதம்-சேலம் செருப்படி திருவிழா
    X

    ஆடி மாதம்-சேலம் செருப்படி திருவிழா

    • சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.
    • உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும்.

    விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

    சேலம் ஏழு பேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம்.

    ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா.

    இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும்.

    அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும்.

    வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார்.

    இதுதான் செருப்படித் திருவிழாவாகும்.

    உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள்.

    இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா.

    இப்படி பல விழாக்கள் வித விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.

    Next Story
    ×