search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ட்விட்டரில் மோடியை பின்தொடர்வோர் போலியில்லை - ட்விட்டர் விளக்கம்
    X

    ட்விட்டரில் மோடியை பின்தொடர்வோர் போலியில்லை - ட்விட்டர் விளக்கம்

    இந்திய பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல்வாதிகளை ட்விட்டரில் பின்தொடர்வோர் குறித்த தகவல்கள் உண்மையில்லை என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு இதர அரசியல்வாதிகளை ட்விட்டரில் பின்தொடரும் கணக்குகளில் கணிசமானவை போலி என தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியயது. 

    இந்நிலையில், அரசியல்வாதிகளை காப்பாற்றும் வகையிலான அறிவிப்பை ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. அரசியல்வாதிகளை பின்தொடர்வோரில் பெரும்பாலானவை போலி கணக்குகள் என்ற தகவல் முற்றிலும் உண்மையில்லை என ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    சமீபத்தில் ட்விட்டர் ஆடிட் என்ற பெயரில் இணையத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மற்றும் பல்வேறு முன்னணி அரசியல்வாதிகளை பின்தொடர்வோரில் பெரும்பான்மையானவை போலி கணக்குகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அறிக்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் அதிகளவு பிழைகள் இருப்பதாகவும், ட்விட்டர் ஆடிட் ட்விட்டரின் அதிகாரப்பூர்வ சேவை கிடையாது என ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் பிழை இருப்பதால் ட்விட்டர் ஆடிட் வெளியிட்டிருக்கும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என ட்விட்டர் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


    புகைப்படம்: நன்றி ட்விட்டர் ஆடிட்

    ட்விட்டர் ஆடிட் கருவியானது ட்விட்டருடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு சேவையாகும். இதில் ட்விட்டர் பின்தொடர்பாளர்கள் 5000 பேரை தேர்வு செய்து அவர்கள் பதிவிட்டு இருக்கும் ட்விட்கள், அவர்களை பின்தொடர்வோர், மியூச்சுவல் ஃபாளோவர்கள் மற்றும் இதர அம்சங்களை கணக்கிட்டிருக்கிறது.

    அதிக பின்தொடர்பாளர்களை வைத்திருப்போர் அவற்றை செயற்கையான அல்லது நேர்மையற்ற முறையில் பெற்றிருப்பபர் என்பதால் ட்விட்டர் ஆடிட் தகவல்களை நம்ப வேண்டாம் என ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 

    ட்விட்டர் ஆடிட் வெளியிட்ட தகவல்களின் படி ராகுல் காந்தி 67% போலி பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவரை தொடர்ந்து அமித் ஷா, சஷி தரூர் மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரில் 61% பேர் போலி கணக்குகள் என தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×