search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை
    X

    ரன் குவிக்க வேண்டும் என்ற தீராத பசியில் உள்ளேன்- ஆர்சிபிக்கு பொல்லார்டு எச்சரிக்கை

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார். #MIvRCB #RCBvMI
    ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் நாளை தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என பொல்லார்டு கூறியுள்ளார்.

    இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நான் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவன். என்னை பொருத்த வரையில் மிகப்பெரிய வீரர்களுக்கு எதிரான ஆட்டத்தை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொள்வேன்.



    ஒரு வீரராக எதிரணி எப்படி பட்டது, உங்களுக்கு எதிராக எப்படி செயல்பட இருக்கிறார்கள் என்பதை யோசித்து அதற்கு ஏற்றபடி கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். நாளைய போட்டி அணிக்கு மட்டுமல்ல, எனக்கும் சக்சஸ்புல் போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

    ஒருவேளை நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தால், அதன்பின் நடைபெறும் 10 போட்டிகளும் வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்துவிடும்.
    Next Story
    ×