search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம்"

    • ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • 53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.

    அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    53 வயதாகும் ராகுல் காந்தி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அப்து ரோசிக் எமிரேட்சை சேர்ந்த அமீரா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
    • அப்து ரோசிக் தனது வருங்கால மனைவிக்காக வாங்கிய வைர மோதிர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனில் பங்கேற்ற போட்டியாளரும் சமூக வலைதள பிரபலமுமான அப்து ரோசிக் (20), ஜூலை மாதம் 7-ந்தேதி திருமணம் செய்ய உள்ளார். அவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், அப்து ரோசிக் எமிரேட்சை சேர்ந்த அமீரா (19) என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். திருமணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    அப்து ரோசிக் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது வருங்கால மனைவிக்காக வாங்கிய வைர மோதிர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    என் வாழ்க்கையில் நான் கற்பனை கூட செய்ததில்லை நான் இவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று. நான் தேடி கண்டுபிடித்துவிட்டேன் என்னை மதிக்கும் என் வாழ்க்கையை தடையாக பார்க்காத அன்பை கண்டுபிடித்து விட்டேன்.

    நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

    #காதல் #திருமணம் #நிச்சயதார்த்தம் #வாழ்க்கை #திருமணம் #காதல் #வாழ்க்கைத்துணை #நிச்சயதார்த்தம்

    என்று பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.
    • இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    ஒரு முகமும், நான்கு கரங்களும் விளங்கும்படியாக மூலவர் உள்ளார்.

    வலது கரத்தில் அபயம் அளித்து பின்பக்க வலது கரத்தில் ஜபமாலையும் முன்பக்க இடது கரம் இடுப்பிலும் பின்பக்க இடது கரத்தில் கமண்டலமும் ஏந்தி தம்மைத் தொழுவோர்க்கு அபயம் அளித்துக் காக்கும் பொருட்டு எழுந்தருளி உள்ளார்.

    சூரனை அழித்து வெற்றி பெற்ற முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய செல்லும் வழியில் சிறுவாபுரியில் சற்று இளைப்பாறி பிறகு இப்பசுமைச் சோலையில் பாலசுப்பிரமணியராய் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

    சிறுவாபுரியில் தங்கி அமுது உண்ட இந்திரன் முதலான தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க முருகன் அருளினான்.

    இத்தலத்து சுப்பிரமணியரை வழிபாட்டால் நல்ல குடும்பம், சிறந்த வீடு அமையும் என்பது ஐதீகம்.

    இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடி உள்ளார்.

    இவரை தரிசனம் செய்வதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மணக்கோலத்தில் காட்சி தரும் முருகன் இது போன்று வேறு எங்கும் கிடையாது என்பது சிறப்பு அம்சமாகும்.

    இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமண தடை நீங்கி மனம் போல வாழ்க்கை துணை அமையும் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.
    • ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது.

    திருமணப் பொருத்தம் என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல்.

    திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

    ஒரே இராசியில் திருமணம் செய்யலாமா?

    திருமணப் பொருத்தத்தில் மிகவும் முக்கியமானது நட்சத்திரப் பொருத்தம் ஆகும். நட்சத்திரப் பொருத்தங்கள் 10க்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் முக்கியமான பொருத்தமான மாங்கல்ய பொருத்தம் இருக்காது.


    தம்பதிகள் வெவ்வேறு இராசிகளாகவும் வெவ்வேறு நட்சத்திரங்களாகவும் இருப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் ஒரே இராசியாக இருக்கும்பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது இருவருக்கும் ஒரே மாதிரியான கிரக நிலைகள் அமையும். ஏழரை சனி, அஷ்டம சனி போன்றவை இருவருக்கும் ஒரே சமயத்தில் வரும் போது அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்புகள் உண்டு.

    ஒரே இராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை. ஆனால் ஒரே இராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒரே மாதிரியாக இருக்கும். எனினும் மோசமான கிரகநிலைகளின் போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

    எனவே, ஒரே இராசியில் மற்றும் நட்சத்திரத்தில் உள்ள இருவரை சேர்த்து வைக்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரே இராசியாக இருந்தாலும் வேறு வேறு நட்சத்திரம் உடையவரர்களாக இருப்பது ஓரளவு பிரச்சனையை குறைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
    • இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.

    பாட்னா:

    பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.

    இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
    • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

    தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

    இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

    தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

    ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

    அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

    தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

    அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

    • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது21). இவர் பெயிண்டிங் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிசந்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் இன்ஸ்டா கிராமம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியதர்ஷினி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதினர். இதனால் அவர்கள் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்தனர். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அருண்பாண்டியின் குடும்பத்தினர் சம்மதித்ததால் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கோவிலில் அருண்பாண்டி மற்றும் பிரியதர்ஷினிக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பபடி செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.

    பொம்மைகள் மீது பெண்களுக்கு அதிக ஆசை இருப்பதை காண முடியும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மைகள் மீதான காதலால் பொம்மைகளை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

    அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பெலிசிட்டி காட்லெக் என்ற 25 வயது பெண் தன்னை பொருட்கள் மீதான ஈர்ப்பாளர் என்று கூறி உள்ள அவர், பொம்மைகளுடன் பலதார உறவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் ஹாலோவின் பொருட்கள் விற்கும் தளத்தில் பார்த்த பொம்மைகளுடன் காதலில் விழுந்துள்ளார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் பேய் பொம்மையான கெல்லி ரோஸியுடன் முதல் திருமணத்தை மேற்கொண்ட பெலிசிட்டி தற்போது ராபர்ட் என்ற ஆண் பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், இவரின் துணையுடன் 10 பொம்மை குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேச்சல் லூனா, பில்லி என தற்போது 10 பொம்மை குழந்கைள் இருப்பதாக கூறி உள்ள பெலிசிட்டி, ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டதால் கெல்லி பொறாமை கொள்ள மாட்டாள் எனவும், அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • கிராமத் தலைவரான சுர்ஜராம் கோதாராவின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.

    ராஜஸ்தானில் முதியவர் ஒருவர் தனது 17 பேரக்குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

    ராஜஸ்தானில் நோகா மண்டலத்தில் உள்ள லால் மதேஸர் கிராமத்தை சேர்ந்தவர் சுர்ஜராம் கோதாரா. கிராமத் தலைவரான இவரின் குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். அவரது குடும்பத்தில் 17 பேரக்குழந்தைகளுக்கு திருமண வயதை எட்டிய நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக திருமணம் செய்து வைத்தால் செலவு அதிகம் ஆகும் என கருதினர்.

    எனவே தங்களது பேரக்குழந்தைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்த சுர்ஜராமின் குடும்பத்தினர் இதற்காக ஒரே அழைப்பிதழை தயார் செய்தனர். பின்னர் அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு முதல் நாளில் 5 பேரன்களுக்கும், மறுநாளில் 12 பேத்திகளுக்கும் திருமணம் நடந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது.

    ×