search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.
    • மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    01. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    02. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    03. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    04. காரைக்காலினைச் சேர்ந்த தாமானங்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பெரிதும் சிறிதுமாய் இரண்டு விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு விநாயகர் மற்றொன்று இங்கிலீஷ் விநாயகர்.

    05. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழிபாடாகக் கொண்டாடப்படுகின்றது.

    06. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    07. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    08. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.

    09. சென்னை தியாகராய நகரில் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்தி சக்தியுடன் பத்துத் தலை கொண்ட வலஞ்சுழி விநாயகர் உள்ளார்.

    10. எகிப்தில் உள்ள விநாயகர் ஒருவர் இருக்கின்றார். இவர்தமது கையில் சாவி வைத்து இருக்கின்றார். தம்மை வழிபாடு செய்பவர்களுக்கு இவர் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து விடுவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

    11. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

    12. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    13. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    14. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    15. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.

    16. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

    17. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் 'ஐங்கரன்' என்று அழைக்கப்படுகின்றார்.

    18. அசோகர் காலத்தில் அவர் மகள் சாருமதி நேபாளத் தில் விநாயகருக்குக் கோவில் கட்டினார்.

    19. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.

    20. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாள் விநாயக விரதம் இருந்து வணங்குதல் விநாயக நவராத்திரி எனப்படும்.

    • பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும்.
    • இது மூலாதாரச் சக்கரமாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும்.

    ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம், அல்லது வஜ்ராசனம், அல்லது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.

    உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

    முதலில் தலை முதல் கால் வரை உடல் வெளித் தசையில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணி ஒரு 5 நிமிடம் தளர்த்தவும்.

    பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.

    பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும்.

    இது மூலாதாரச் சக்கரமாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும்.

    அல்லது பத்து நிமிடம் மனதிற்குள் ஜெபிக்கவும்.

    அப்பொழுது மலர்களினால் மானசீகமாக அர்ச்சனை செய்யவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிட்டு மூலாதாரச் சக்கரத்தில் கணபதியின் முழு அருளைப் பெறுவதாக தியானிக்கவும்.

    பின் விநாயகா, நான் பல ஜென்மங்களில் செய்த தீவினைப் பதிவுகள் அங்கே உன்னிடத்தில் வாசனையாக உள்ளன.

    எல்லா தீவினைகளும் அழியட்டும். இந்த உடல்,உள்ளம், புனிதம் அடையட்டும்.

    எண்ணம், சொல், செயல் மூன்றும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையை அருள்வாய் விநாயகா என்று பிரார்த்திக்கவும்.

    பின் மெதுவாக ஓம் சாந்தி என்று மூன்று முறைகள் கூறி தியானத்தை நிறைவு செய்து கண்களைத் திறந்து கொள்ளவும்.

    மிக அற்புத மகிமை வாய்ந்த இந்த மூலாதார கணபதி தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது.

    மூலாதார கணபதி சக்கர தியானத்தின் பலன்கள் இத்தியானத்தால் நம் ஊழ்வினைகள் அறுக்கப்படுகின்றது.

    உடல் உள் உறுப்புக்கள் நல்ல வலுவாக இயங்குகின்றது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் வாழலாம்.

    உடலில் உயிர்சக்தி மூலாதாரத்தில் இருந்து தான் உடல் முழுக்க இயங்குகின்றது.

    இந்த மூலாதாரம் பழுதடைந்தால் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக இயங்காது.

    உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படும். இந்த அற்புத தியானத்தால் உயிரோட்டம் மிகச் சிறப்பாக இயங்குகின்றது.

    என்ன கிரக ஜாதகதோஷங்கள் இருந்தாலும் அவை கணபதி அருளால் விலகி நன்மைகள் நடக்கும்.

    இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

    நம் கர்ம வினைகள் நீங்கும். மங்கள வாழ்வு வாழலாம்.

    காமாட்சி அம்மன் அருள்புரியும் மாங்காட்டில் நெ.37, காமாட்சி அம்மன் நகர் அனெக்சில் அமைந்துள்ள ஸ்ரீபதஞ்சலி மகரிஷி தியான ஆலயத்தில் வாரந்தோறும் வியாழன் இரவு 7முதல் 8 மணி வரை இந்த சக்கரா தியானம் பயிற்றுவிக்கப்படுகின்றது.

    • விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.
    • அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்து வெள்ளி விரதம், செவ்வாய் விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், துர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

    தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத முறைகளில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.

    விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும்.

    அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம்.

    ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்கள் கடைப்பிடிக்கும் இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

    • இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.
    • அதற்கு தலைவரான கணபதி பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

     மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம்.

    இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும்.

    முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

    இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.

    அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    உடம்பில் உள்ள முக்கியச் சக்கரங்கள்

    மூலாதாரம்- கணபதி

    சுவாதிஷ்டானம்-பிரம்மா, சரஸ்வதி

    மணிபூரகம் -மகாவிஷ்ணு, மகாலட்சுமி

    அனாகதம்-சிவன், பார்வதி

    விசுக்தி-அர்த்தநாரீஸ்வரர்

    ஆக்ஞை-சதாசிவம்

    சிதாகாசம்-வெட்டவெளி

    யோகம் என்றால் இணைதல் என்று பொருள். மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே யோகம்.

    இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன.

    இந்த கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம்.

    செல்வம் செழிக்கும். ஆரோக்கியம் கைகூடும். புகழ் பெருகும். உடல், மன அமைதி கிடைக்கும்.

    இந்த சக்கரா தியானத்தில் கூட மற்ற சக்கரங்களில் தியானம் செய்யும் நெறிமுறைகளோடு செய்ய வேண்டும்.

    ஆனால் மூலாதாரத் தியானம் பயப்படாமல் செய்யலாம். எந்த பக்க விளைவும் கிடையாது.

    காரணம் இதில் நம் பிள்ளையார் அல்லவா அதிபதி!

    • இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.
    • நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

    கணம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு.

    இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற் கடவுள்.

    நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும்.

    மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது.

    அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.

    வினைகளுக்கு நாயகன் விநாயகன்.

    மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே.

    • இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.
    • தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம்.

    இதற்கு விநாயகர் அவர் எல்லாமுமாக இருக்கிறார் என்பது பொருள். அந்த சுலோகத்தை சொல்லி பாருங்கள் தெரியும்.

    சுக்லாம்பரதர, விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

    பிரஸந்த வதநம் தியோயேத் சர்வ விக்நோப சாந்தயே

    'சுக்லாம்பரதர' - வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

    'விஷ்ணு' என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். 'சசிவர்ண'- நிலா மாதிரி நிறம் உடையவர்.

    'சதுர்புஜ' - நான்கு கை உள்ளவர்.

    'பிரஸந்த வதந'- நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.

    இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும்.

    தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கனைப் பெறலாம்.

    மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன.

    அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது.

    மேலும் சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்சாகவே சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

    • தோஷங்கள் யாவும் நீங்கும்.
    • வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும்.

    விநாயக சதுர்த்தி அன்று விநாயகரை போற்றி வழி படுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து வழங்கி இருக்கிறோம். படியுங்கள். பலன் பெறுங்கள்.

    "தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப் பெருந்தலைவனே !

    கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே !

    அற்புதம் நிகழ்த்துபவனே !

    மோதகம் ஏந்தியவனே !

    சந்திரனைத் தலையில் சூடியவனே !

    உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே !

    உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே !

    உம்மை வணங்குகிறேன். தேவாதிதேவனே !

    பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே !

    வல்லமை நிறைந்தவனே !

    ஆனைமுகனே !

    கருணை மிக்க இதயம் கொண்டவனே !

    அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே !

    எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.

    ஓங்கார வடிவினனே ! கருணாமூர்த்தியே !

    பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே !

    எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே !

    பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே !

    அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே !

    நித்ய வடிவினே !

    உன்னை வணங்குகிறேன். கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப் பெருமானே ! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே !

    பக்தர்களின் துயர் களைபவனே !

    ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே !

    செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே !

    உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.

    ஒற்றைக் கொம்பனே ! கணபதீஸ்வரா !

    சிவ பெருமானின் பிள்ளையே !

    ஆதிஅந்தமில்லாதவனே !

    துன்பம் துடைப்பவனே !

    யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே !

    உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.

    இதை விநாயக சதுர்த்தி அன்று விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள் யாவும் இனிதே நிறைவேறும்.

    தோஷங்கள் யாவும் நீங்கும்.

    வாழ்வில் உண்டாகும் துன்பம் தொல்லை யாவும் அடியோடு அகலும்.

    குலம்தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். மேம்பாடும் நற்புகழும் உண்டாகும். அஷ்டமாசித்திகள் கை கூடும்.

    • அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.
    • முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும்.

    நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும்.

    இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.

    முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும்.

    உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.
    • பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

    பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள்.

    மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.

    சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

    • விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம்.
    • என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம்.

    விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம்.

    என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம்.

    வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.

    அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும்.

    சென்ற வேலையில் வெற்றி உண்டாகும்.

    • சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
    • பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.

    ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

    கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும்.

    சிவபெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.

    சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்கு சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

    சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.

    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.
    • லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும்.

    இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.

    இதைத்தவிர சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்க புராணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும்.

    மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    மகாசிவராத்திரி வழி பாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோவிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    ×