search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆறாதாரச் சக்கரத்தில் மூலாதாரமாய் கணபதி...
    X

    ஆறாதாரச் சக்கரத்தில் மூலாதாரமாய் கணபதி...

    • இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.
    • அதற்கு தலைவரான கணபதி பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம்.

    இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும்.

    முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

    இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது.

    அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    உடம்பில் உள்ள முக்கியச் சக்கரங்கள்

    மூலாதாரம்- கணபதி

    சுவாதிஷ்டானம்-பிரம்மா, சரஸ்வதி

    மணிபூரகம் -மகாவிஷ்ணு, மகாலட்சுமி

    அனாகதம்-சிவன், பார்வதி

    விசுக்தி-அர்த்தநாரீஸ்வரர்

    ஆக்ஞை-சதாசிவம்

    சிதாகாசம்-வெட்டவெளி

    யோகம் என்றால் இணைதல் என்று பொருள். மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே யோகம்.

    இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன.

    இந்த கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம்.

    செல்வம் செழிக்கும். ஆரோக்கியம் கைகூடும். புகழ் பெருகும். உடல், மன அமைதி கிடைக்கும்.

    இந்த சக்கரா தியானத்தில் கூட மற்ற சக்கரங்களில் தியானம் செய்யும் நெறிமுறைகளோடு செய்ய வேண்டும்.

    ஆனால் மூலாதாரத் தியானம் பயப்படாமல் செய்யலாம். எந்த பக்க விளைவும் கிடையாது.

    காரணம் இதில் நம் பிள்ளையார் அல்லவா அதிபதி!

    Next Story
    ×