search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvapuri Murugan"

    • ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி!
    • ஓம் பழநி வேல் போற்றி!

    1. ஓம் சீர்மிகு செந்தில் போற்றி

    2. ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி

    3. ஓம் பழநி வேல் போற்றி

    4. ஓம் பரங்குன்றக் குமரன் வேல் போற்றி

    5. ஓம் ஏரகத்து எம்மான் வேல்போற்றி

    6. ஓம் அழகர் மலை அழகன் வேல் போற்றி

    7. ஓம் குன்றுதோறாடும் குழகன் வேல் போற்றி

    8. ஓம் தனி வேல் போற்றி

    9. ஓம் சுடர் வேல் போற்றி

    10. ஓம் செவ் வேல் போற்றி

    11. ஓம் வெற்றி வேல் போற்றி

    12. ஓம் நல்வேல் போற்றி

    13. ஓம் அயில் வேல் போற்றி

    14. ஓம் பெரு வேல்போற்றி

    15. ஓம் பருவே வேல் போற்றி

    16. ஓம் கருணை வேல் போற்றி

    17. ஓம் முரண வேல் போற்றி

    18. ஓம் அழகு வேல் போற்றி

    19. ஓம் கனக வேல் போற்றி

    20. ஓம் வச்சிர வேல் போற்றி

    21. ஓம் வைர வேல் போற்றி

    22. ஓம் மாணிக்க வேல் போற்றி

    23. ஓம் தங்க வேல் போற்றி

    24. ஓம் சதுர் வேல் போற்றி

    25. ஓம் சான்விமுளை வேல் போற்றி

    26. ஓம் கூர் வேல் போற்றி

    27. ஓம் ஜய வேல் போற்றி

    28. ஓம் வடிவேல் போற்றி

    29. ஓம் திணி வேல் போற்றி

    30. ஓம் அருள் வேல் போற்றி

    31. ஓம் ஓம், ஐம் ரீம் வேல் போற்றி

    32. ஓம் கதிர் வேல்போற்றி

    33. ஓம் வீர வேல் போற்றி

    34. ஓம் தீர வேல் போற்றி

    35. ஓம் ஐ வேல் போற்றி

    36. ஓம் தாரை வேல் போற்றி

    37. ஓம் செவ்வேள் திருக்கை வேல் போற்றி

    38. ஓம் வாரிகுளித்த வேல் போற்றி

    39. ஓம் முத்தையனார்கை வேல் போற்றி

    40. ஓம் கொற்ற வேல் போற்றி

    41. ஓம் சூர்மார்பு தொளைத்த வேல் போற்றி

    42. ஓம் குன்று எறிந்த வேல் போற்றி

    43. ஓம் வினைதீர்க்கும் வேல் போற்றி

    44. ஓம் இடர் களையும் வேல்போற்றி

    45. ஓம் ஞான வேல் போற்றி

    46. ஓம் குமர வேல்போற்றி

    47. ஓம் சக்தி வேல் போற்றி

    48. ஓம் குழந்தை வேல் போற்றி

    49. ஓம் நீதி வேல் போற்றி

    50. ஓம் புனித வேல் போற்றி

    51. ஓம் துணை வேல் போற்றி

    52. ஓம் என் இதயவேல் போற்றி

    53. ஓம் எனை காக்கும் வேல்போற்றி

    54. ஓம் துன்பம் போக்கும் வேல் போற்றி

    55. ஓம் துயர் துடைக்கும் வேல் போற்றி

    56. ஓம் இன்பம் அளிக்கும் வேல் போற்றி

    57. ஓம் அடர் வேல்போற்றி

    58. ஓம் வைவேல் போற்றி

    59. ஓம் ஒளி திகழ் வேல் போற்றி

    60. ஓம் பகை கெடுக்கும் வேல் போற்றி

    61. ஓம் பலமளிக்கும் வேல் போற்றி

    62. ஓம் பயம் போக்கும் வேல்போற்றி

    63. ஓம் புலமை நல்கும் வேல்போற்றி

    64. ஓம் சித்தி தரும் வேல் போற்றி

    65. ஓம் முக்தி தரும் வேல் போற்றி

    66. ஓம் அடியாரோடிணைக்கும் வேல் போற்றி

    67. ஓம் அன்பை வழங்கும் வேல் போற்றி

    68. ஓம் பிணியைப் போக்கும் வேல் போற்றி

    69. ஓம் பிறவாமை அருளும் வேல் போற்றி

    70. ஓம் நல்லன எல்லாம் தரும் வேல் போற்றி

    71. ஓம் தனம் தரும் வேல் போற்றி

    72. ஓம் தளர் வறியா மனம் தரும் வேல் போற்றி

    73. ஓம் தெய்வ வடிவம் தரும் வேல் போற்றி

    74. ஓம் சினம் கெடுக்கும் வேல் போற்றி

    75. ஓம் காலனைக் கடியும் வேல் போற்றி

    76. ஓம் காவலாய் வரும் வேல் போற்றி

    77. ஓம் கவலையெல்லாம் போக்கும் வேல் போற்றி

    78. ஓம் நெய் வைத்த வேல் போற்றி

    79. ஓம் கேடில் வேல் போற்றி

    80. ஓம் சிங்கார வேல் போற்றி

    81. ஓம் அடியார் உள்ளத்தில் இருக்கும் வேல் போற்றி

    82. ஓம் அன்பர்க்கருகில் இருக்கும் வேல் போற்றி

    83. ஓம் வம்பர்களை வாட்டும் வேல் போற்றி

    84. ஓம் துஷ்டர்கள் கைதுணிக்கும் வேல் போற்றி

    85. ஓம் குறை தீர்க்கும் வேல்போற்றி

    86. ஓம் குற்றம் களையும் வேல் போற்றி

    87. ஓம் எழில் வேல் போற்றி

    88. ஓம் அண்டினரைக்காக்கும் வேல் போற்றி

    89. ஓம் அசுரர்களை அழித்த வேல் போற்றி

    90. ஓம் அமரர்க் கபயம் அளித்த வேல் போற்றி

    91. ஓம் அடியவர் துயரை அழித்திடும் வேல் போற்றி

    92. ஓம் அழல் வேல் போற்றி

    93. ஓம் சிந்து வேல் போற்றி

    94. ஓம் சித்திர முனை வேல்போற்றி

    95. ஓம் துங்கத் தனி வேல் போற்றி

    96. ஓம் பேர் பெரிய வேல் போற்றி

    97. ஓம் மந்த்ர வேல் போற்றி

    98. ஓம் வெற்றி முனை வேல்போற்றி

    99. ஓம் குன்றம் பிளந்த வேல் போற்றி

    100. ஓம் அகிலமெலாம் போற்றும் வேல்போற்றி

    101. ஓம் எண்ணியதை எளிதில் தரும் வேல் போற்றி

    102. ஓம் ஏக்கத்தைப் போக்கும் வேல்போற்றி

    103. ஓம் என்றும் எங்கும் இருக்கும் வேல் போற்றி

    104. ஓம் இன்பமே தரும் இனிய வேல் போற்றி

    105. ஓம் சஷ்டிநாதன் கைவேல் போற்றி

    106. ஓம் குராவடிக் கோமான் கை வேல் போற்றி

    107. ஓம் நவரத்தின வேல் போற்றி

    108. ஓம் சீர்மிகு சிறுவாபுரி செல்வன் கைவேல் போற்றி போற்றி!

    • அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி!
    • அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி!

    1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி

    2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி

    3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி

    4. அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி

    5. அடியார் இருவினைத் தொகையறுப்பாய் போற்றி

    6. அடியார்கள் பங்கில் வருதேவே போற்றி

    7. அத்தா நிருத்தா அரத்த ஆடையா போற்றி

    8. அந்தண் மறை வேள்வி காவற்கார போற்றி

    9. அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவா போற்றி

    10. அமருல கிறைவ உமைதரு புதல்வ போற்றி

    11. அரிய மோன விழிதிறந்த நளின பாதம் போற்றி

    12. அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி

    13. அறு சமய சாத்திரப் பொருளோனேபோற்றி

    14. அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வேபோற்றி

    15. அறிவும் உரமும் அறமும் நிறமும் உடையாய் போற்றி

    16. அறிவிற் பெரிய மேன்மைக்கார போற்றி

    17. அன்பர் மகிழ வரங்களும் அருள்வாய் போற்றி

    18. ஆதி அந்தமுமான சங்கரி குமரேசாபோற்றி

    19. ஆதி முடிவு அற்ற திரு நாமக்காரபோற்றி

    20. ஆயிர முகத்து நதி பாலாபோற்றி

    21. ஆறுதிருப்பதியில் வளர் பெருமாள் போற்றி

    22. இன்சொல் விசாகா க்ருபாகர போற்றி

    23. இணையில் அருணை பழநி கிழவபோற்றி

    24. இமயவரை ஈன்ற மங்கைக்கு ஒருபாலா போற்றி

    25. உக்ர இறையவர் புதல்வா முதல்வாபோற்றி

    26. உமையாள் பயந்த இலஞ்சியமே போற்றி

    27. உலகு அளவு மால் மகிழ்ந்த மருகாபோற்றி

    28. எந்தனுடைச் சாமிநாதா வயலூராபோற்றி

    29. எழுதா மறைமா முடிவே வடிவே போற்றி

    30. என்றும் அகலாத இளமைக்கார போற்றி

    31. ஒருகால் முருகவேள் எனவும் அருள்தாராய் போற்றி

    32. கசிவார் இதயத் தமிர்தே போற்றி

    33. கடம்ப மலர் முடிக்கும் இளையோனே போற்றி

    34. கரிமுகவன் இளைய கந்தப் பெருமான் போற்றி

    35. கருதுவார் மனம் புகுந்த பெருமாளேபோற்றி

    36. கர்பர் கயிலாயர் மைந்த வடிவேலாபோற்றி

    37. கவுரி நாயகனார் குரு நாயக போற்றி

    38. குருபுங்கவ எண்குண பஞ்சரனே போற்றி

    39. குன்றுருவ ஏவும் வேலைக்கார போற்றி

    40. குமர குர கார்த்திகைப் பெருமாளேபோற்றி

    41. குவடு தவிடு படக் குத்திய காங்கேயா போற்றி

    42. குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி

    43. குறமகளை வந்தித்து அணைவோனே போற்றி

    44. சகல வேதமுமே தொழு சமரபுரிப் பெருமாளே போற்றி

    45. சரவணத்திற் பிறந்த ஒரு கந்தசுவாமியே போற்றி

    46. சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமான் போற்றி

    47. சிந்தாலத்தை அடர் சுந்தாபோற்றி

    48. சலைகள் உருவிட அயிலைவிடு குமர போற்றி

    49. சிவகாம சுந்தரியே தரு பாலக போற்றி

    50. சூர்மா மடியத் தொடுவேலவனே போற்றி

    51. செஞ்சொல் அடியார்கள் வாரக்காரபோற்றி

    52. செஞ் சேவற், செங்கையுடைய சண்முகா போற்றி

    53. செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார போற்றி

    54. செந்தமிழ் நூல் விரித்த செவ்வேள் போற்றி

    55. செவ்வான் உருவில் திகழ் வேலவா போற்றி

    56. சேலார் வயல் பொழில் செங்கோடைக்குமர போற்றி

    57. செயே வேளே பூவே கோவே போற்றி

    58. சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி போற்றி

    59. ஞானகர சுர பாஸ்கரனே போற்றி

    60. தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா போற்றி

    61. தமிழ்தனை கரை காட்டிய திறலோனே போற்றி

    62. திரியம்பகி அளித்த செல்வச் சிறுவாபோற்றி

    63. திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வேபோற்றி

    64. திருக்குராவடி நிழல் தனில் உறைவோய் போற்றி

    65. திருந்த வேதம் தண்தமிழ் தெரிதருபுலவ போற்றி

    66. திருமக சந்தர முருக கடம்ப சிவசுதபோற்றி

    67. திருநடனம் இடு மயிலில் வரு குமர போற்றி

    68. திமிர தினகர முருக சரவணபவ போற்றி

    69. திறல் பூண்ட சுப்ரமண்ய ஷண்முகவேலா போற்றி

    70. தீர தீர தீராதி தீரப் பெரியோனே போற்றி

    71. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே போற்றி

    72. தூவிக்குல மயில் வாகனனே போற்றி

    73. தெரிவை பாரதியர் சாதியிலாதவர் தரசேய் போற்றி

    74. தெய்வ வாரண வநிதை புநிதா போற்றி

    75. தொழுது வழிபடும் அடியர் காவற்கார போற்றி

    76. நக்கீரர் சரண் என வந்தருள் முருக போற்றி

    77. நீலக்ரிப கலாபத் தேர்விடு சேவகாபோற்றி

    78. நீர் பெருஞ் சடையாரருள் தேசிகாபோற்றி

    79. நிதியே நித்தியமே என் நினைவேபோற்றி

    80. நினைத்ததை முடித்தருள் கிருபைக் கடலே போற்றி

    81. பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகாபோற்றி

    82. பரமற்கு அருமறை உபசேதித்த தேசிகா போற்றி

    83. பரமகல்யாணி தந்த பெருவாழ்வேபோற்றி

    84. பல குன்றிலும் அமர்ந்த பெருமாள்போற்றி

    85. பொன்பரவு கதிர்வீசு வடிவேலா போற்றி

    86. மகாமாயை களைந்திட வல்லபிரான்போற்றி

    87. மஞ்சரி குஞ்சரி தோய் காங்கேயாபோற்றி

    88. மணம் அறாத கடம்பு பனைவோய்போற்றி

    89. மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகா போற்றி

    90. மந்தாகினி தந்த வரோதயனே போற்றி

    91. மயில் கொண்டு உலகு நொடியில் வருவாய் போற்றி

    92. மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா போற்றி

    93. மறவாதவர் நினைப்பவை முடிப்பவாபோற்றி

    94. மாநிலம் எழினும் மேலான நாயக போற்றி

    95. முத்தமிழை ஆயும் வரிசைக்கார போற்றி

    96. மைவருங் கண்டத்தர் மைந்தா போற்றி

    97. வடிவும் இளமையும் வளமையுமுடையாய் போற்றி

    98. வாசக அதீத மனோலய பஞ்சுரா போற்றி

    99. வாசுகி எடுத்துதவும் வாசிக்காராபோற்றி

    100. வாவியில் உதித்த முகமாயக்காராபோற்றி

    101. வாகை புனை குக்குட பதாகைக் காரா போற்றி

    102. வேடர் குலப் பிடிதோய்மலையே போற்றி

    103. வேதாள கணம் புகழ் வேலவனேபோற்றி

    104. வை வைத்த வேற்படை வானவனேேபாற்றி

    105. வேத ஆகம சித்ர வேலாயுதனேபோற்றி

    106. வேலும் மயிலும் நினைந்தவர் துயர்தீர அருள்வாய் போற்றி

    107. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான

    தண் சிறுவை தனில் மேவும் பெருமான்போற்றி போற்றி

    108. வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமான் போற்றி போற்றி

    இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை நிரம்ப இருப்பு வைத்துள்ள பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து

    பிணிக ளான துயர்உ ழன்று- தடுமாறிப்

    பெருகு தீயவினையி னொந்து கதிகள்தோறு மலைபொருந்தி

    பிடிப டாத ஜனன நம்பி- அழியாதே

    நறைவி ழா த மலர்மு கணந்த அரிய மோன வழிதிறந்த

    நளின பாதம் என சிந்தை- அகலாதே

    நரர்சு ராதி பரும்வ ணங்கும் இனிய சேவைதனை விரும்பி

    நல ன்தாக அடியன் என்று- பெறவேனோ

    பொறிவ ழாத முனிவர் தங்கள் நெறிவழாத பிலனுழன்று

    பொருநி சாச ரனைநி னைந்து- வினைநாடிப்

    பொருவி லாமல் அருள்புரிந்து மயிலின் ஏறி நொடியில் வந்து

    புளக மேவ தமிழ் புனைந்த- முருகோனே

    சிறுவ ராகி இருவர் அந்த கரிபதாதிகொடு

    பொருஞ் சொல்

    சிலைஇ ராமன் உடன்எ திர்ந்து- சமராடிச்

    செயம தான நகர்அ மர்ந்த அளகை போல வளமி குந்த

    சிறுவை மேவி வரமி குந்த - பெருமாளே.

    சீதாபிராட்டியை கொடுஞ் சொல்லால் கானகத்துக்கு அனுப்பிய, வில்லேந்திய ராமனை, சிறுவரான லவ- குசலவர் இருவரும், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இவற்றுடன் வந்த போது, எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட குபேர பட்டணமான அளகாபுரி போல எல்லா வளங்களும் மிகுந்துள்ள இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை நிரம்ப இருப்பு வைத்துள்ள பெருமானே, முருகோனே எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    மனமுருகி முருக பெருமானை பிரார்த்தித்து, கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தொலைய வேண்டுமென்று வேண்டி வணங்க வேண்டும்.

    வேல் இரண்டெனு நீள்விழி மாதர்கள்

    காதலின் பொருள் மேவின பாதகர்

    வீணில் விண்டுள நாடிய ரூமைகள் - விலைகூறி

    வேளை யென்பதி லாவசை பேசியர்

    வேசி என்பவ ராமிசை மோகிகள்

    முது நெஞ்சழி ஆசையி லேஉழல்- சிறியேனும்

    மால யன்பர னார்இமை யோர்முனி

    வோர் புரந்தரன் ஆதிய ரேதொழு

    மாத வம்பெறு தாளினை யேதின- மறவாதே

    வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி

    யேவி ரும்பி வினாவுட னேதொழ

    வாழ்வ ரந்தரு வாய்அடி யேன்இடர்- களைவாயே

    நீல சுந்தரிகோமளி யாமளி

    நாடகம்பயில் நாரணி பூரணி

    நீடு பஞ்சமி சூலினி மாலினி- உமைகாளி

    நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ

    காம சுந்தரி யேதரு பாலக!

    நீர்பெரு ருஞ்சடை யாரருள் தேசிக!- முருகேசா

    ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற

    மாநில ங்கள் எலாநிலை யேதரு

    ஆய னந்திரு வூரக மால்திரு- மருகோனே

    ஆட கம்பயில் கோபுர மாமதில்

    ஆல யம்பல வீதியு மேநிறை

    வான தென்சிறு வாபுரி மேவிய- பெருமாளே

    இப்புவியில் உள்ளோர் யாவரும் நிலையான வாழ்வு பெறவும், பெரிய ஏழு உலகங்களும் நிலை பெறவும், உலகை காக்கின்ற திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும் திருமால் மருகோனே உயர்ந்த தங்கத்தால் (ஆடகம்) வேயப்பட்ட கோபுரங்களும், பெரிய மதில்களும் உடைய கோவில்களும் பல வீதிகளும் நிறைந்து உள்ள அழகிய தென் சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருக பெருமானே என்று மனமுருகி இந்த திருப்புகழை ஓதும் போது, இன்றைய சூழலில் நமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள், கஷ்டங்கள், தேக்கங்கள், தடங்கல்கள், வில்லங்கங்கள், விக்கினங்கள், நஷ்டங்களை நினைவில் கொண்டு மனமுருகி முருக பெருமானை பிரார்த்தித்து, அவை நம்மை விட்டு தொலைய வேண்டுமென்று வேண்டி வணங்க வேண்டும். 

    • முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
    • பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.

    அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அதன்மூலம் நாம் பயன்பெறும் முறைகளையும் இங்கே காணலாம்.

    சீதள வாரிஜ பாதா! நமோநம

    நாரத கீத விநோதா நமோநம

    சேவல மாமயில் ப்ரீதா! நமோநம - மறைதேடுஞ்

    சேகரமான ப்ரதாபா! நமோநம

    ஆகமசார சொரூப நமோநம

    தேவர்கள் சேனைமகீபா! நமோநம- கதிதோயப்

    பாதக நீவுகுடாரா! நமோநம

    மாவசு ரேசர்கடோரா நமோநம

    பாரினி லேஜய வீரா! நமோநம- மலைமாது

    பார்வதி யாள்தரு பாலா! நமோநம

    நாவல ஞான மனோலா நமோநம

    பால குமார சுவாமி! நமோநம- அருள்தாராய்

    போதக மாமுகன் நேரான சோதர

    நீறணி வேணியர் நேயா! நமோநம

    பூமக ளார்மரு கேசா மகோததி- இகல்சூரா

    ேபாதக மாமறை ஞான! தயாகரா!

    தேனவிழ் நிபநறா வாரு மார்பக

    பூரணி மாமதி போல் ஆறு மாமுக!- முருகேசா

    மாதவர் தேவர்களோடேமுராரியும்

    மாமலர் மீதுறை வேதாயு மேபுகழ்

    மாநிலம் ஏழினும் மேலான நாயக!- வடிவேலா

    வானவர் ஊரினும் வீறாகி வீறள

    காபுரி வாழ்வினு மேலாக வேதிரு

    வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்- பெருமாளே

    இந்த அர்ச்சனை திருப்புகழை பாடும் போது பொருளை உணர்ந்து நமோ நம என முடியும் போது, மலர்களை சிறுவை பால சுப்பிரமணியனின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

    முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.

    பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.

    இந்த வரிகளை பாடும் போது முருகனை உணர்ந்து வேண்டி, அவனருளால் எல்லா செல்வங்களையும் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    • மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.
    • நான்காவது திருப்புகழில் ‘ஜெயமதான நகர்’ என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.

    இரண்டாவது திருப்புகழ் அர்ச்சனை திருப்புகழாக இருப்பது சிறப்பு.

    பழனிக்கு 'நாதவிந்து கலாதி நமோ நம' என்றும் திருப்புகழைப்போல் சிறுவைக்கு 'சீதள வாரிஜ பாதா! நமோ நம' எனும் திருப்புகழை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

    அர்ச்சனை திருப்புகழ் 6-ல் சரணாகதியின் மேன்மையான முருகனின் பாத சரணத்தைக் குறித்து சிறுவைக்கு எழுதி இருப்பது சிறப்பு.

    'வானவர் ஊரினும் வீறாகில் அளகாபுரி வாழ்வினும் மேலாக திருவாழ் சிறுவாபுரி வாழ்வே சுதாரிபர் பெருமாளே எனப்பாடி இங்கு வருபவர்கள் தேவேந்திர பட்டணத்தை காட்டிலும் வளமாக வாழ்வர் என அழுத்தம் திருத்தமாக எடுத்துச்சொல்கிறார்.

    மூன்றாவது திருப்புகழில் மானிடப்பிறப்பின் துன்பம் எல்லாம் நீங்குவதற்கு வழிகூறுகிறார் அருணகிரி நாதர்.

    நான்காவது திருப்புகழில் 'ஜெயமதான நகர்' என்று சிறுவையே வெற்றி கொண்ட நகரம் என்கிறார்.

    ஜெயமதான நகர் அளகை போல வளமிகுந்த சிறுவைமேலி வரமிருந்த பெருமாளே என வெற்றியை தன்னிடம் அமைத்துக் கொண்ட சிறுவை நகரம்.

    குபேரப்பட்டணம் என அழைக்கப்பட்ட அளகாபுரி போல் எல்லா வளங்களும் அதிகமாகக் குடிகொண்டுள்ள சிறுவாபுரியில் குடிகொண்டு உள்ள சிறுவை முருகன் வரம் அதிகம் தன்னிடம் இருப்பு உள்ளவன் என அருணகிரிநாதர் சொல்வது, வரமிகுந்தவனை அடிக்கடி நாடி வந்து அவனிடம் இருப்புள்ள வரங்களைப் பெற்று செல்ல வாருங்கள், வாருங்கள்! என அழைப்பது இ.ஃபோல உள்ளது.

    • அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
    • அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தான்.

    இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.

    முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம்.

    இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகதப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

    அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.

    அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம்.

    அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன.

    கண்டறியப்பட்ட 215 தலங்களில் 35 தலங்களை சிறப்பாக பாடியுள்ளார்.

    8 தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.

    திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.

    மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு 'சீதளவாரிஜ பாதா நமோ நம:' என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

    • மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.
    • ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.

    அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.

    கைத்தலம் பற்றுகின்ற பொழுது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம், நாணம், பயிர்ப்பு காரணமாக வள்ளி ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து, ஒரு கண்மூடிய நிலையில் நிற்கின்ற கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

    பின்புறத்தில் இருந்து நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண் பார்வையாக முருகனை நோக்குவது போல் சிற்பி சிலையை வடித்திருக்கிறார்.

    மிக நேர்த்தியான வேலைப்பாடு. இதுபோன்ற சிலை வடிவம் வேறு எங்கும் இல்லை.

    ஓவியமாக வள்ளி மலையில் இருக்கும் கோலத்தை, சிலை வடிவமாக இங்கு அமைத்து இருப்பது மிகச்சிறப்பு.

    வள்ளி மணவாளப்பெருமானின் அழகைக்காண கண்கோடி வேண்டும்.

    • அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார்.
    • இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

    சிறுவாபுரியில் முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் மரகதப்பச்சையில் கரும்பச்சை வைரம் போல் பிரகாச ஜோதியாகக் காட்சி அளிக்கிறார்.

    இத்துணை பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை.

    அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு 'மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியதற்கு இணையாக, இங்கு 'மைந்துமயில் உடன் ஆடிவர வேணும்' என பாடி உள்ளதால் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி இருக்கிறார்கள்.

    அருணாசலேசுவரர், அபிதகுஜலாம்பிகை (உண்ணாமுலை) இருவருக்கும் நடுவே அற்புதத் தோற்றமாய், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை தம் மணவாளப் பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார். 

    • இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.
    • இவரை ‘ நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்’ என்கிறார்.

    'அண்டர்பதி குடியேற' என்ற முதல் திருப்புகழில் 'மகிமீற, மகிழ்கூற, மகிழ்வாக, மகிகூற, இன்பமுற' என ஐந்து இடங்களில் மகிழ்ச்சிப் பெருக்கு கூறப்பட்டது போல் வேறு எந்த திருப்புகழிலும் சிறப்பாக ஐந்து முறை சொல்லப்படவில்லை என்பது இன்னும் ஒரு சிறப்பு.

    இந்த திருப்புகழின் ஈற்றடியில் கடைசியில் சொற்கள் ஒரு வாக்கியமாக பொருள்பட அமைந்து இருப்பதும் ஓர் அரிய சிறப்பாகும்.

    'அருளாலே, மகிழ்வாக, எதிர்காண, வரவேணும், உயர்தோளா, வடிவேலா, முருகேசா, பெருமாளே!' என ஒரு வாக்கியமாக அமைவதுபோல் வேறு எந்த ஒரு திருப்புகழிலும் அமையவில்லை.

    இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறுவாபுரி தலத்துக்கு வருபவர் கடுமையான விரதமாக பசி பட்டினி இருந்து நோன்பு நோற்று இறைவனை அடைய வேண்டியதில்லை.

    'சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான தன் சிறுவைதனில் மேவு பெருமாளே!' என்று இவரை 'எப்போதும் நினைத்தாலே போதும் அடியவர்க்கு எளிமையாக முருகன் எழுந்தருளி வருவார்' எனக்கூறுகிறார் அருணகிரிநாதர்.

    • உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.
    • கையில் அதற்கான பணமும் இல்லை என்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விசேஷம் இருக்கும். அதுபோல சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்தால் 'சொந்த வீடு' கனவு நனவாகும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து உள்ளது.

    இதனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக இங்குள்ள முருகனை நாடி வரும் பக்தர்கள் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.

    அதுவும் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் இக்கோவிலை நாடி வரும் பக்தர்கள் அதிகம். பக்கத்து மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் இந்த கோவிலின் பெருமையை கேள்விப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

    நாம் எல்லோருக்கும் எப்படியும் வாழ்க்கையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

    அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களில் இருந்து மீள சொந்த வீடு கனவு ரொம்பவே அதிகமாக இருக்கும்.

    ஆனால் எல்லோரும் அந்த கனவை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடிவதில்லை.

    சிலருக்கு கையில் பணம் இருந்து ஏதோ ஒரு காரணத்தினால் சொந்த வீடு கட்டுவதில் பல தடைகள் ஏற்படுவது உண்டு.

    இதுபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

    உங்கள் உள்ளத்தில் உந்து சக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்து தருகிறேன் என்கிறார் சிறுவாபுரி முருகன்.

    ஆம் சிறுவாபுரிக்கு வந்து முருகனை உள்ளன்போடு வணங்கினால் நாம் நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

    கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் உண்டு என்று சொல்வார்கள்.

    இதனால் இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு எப்படியாவது சொந்த வீடு வேண்டும் என மனமுருகி வேண்டுவதால் அவர்கள் எண்ணங்களை இந்த முருகன் உடனடியாக நிறைவேற்றி தருவதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதற்காக பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதிகளில் செங்கற்களை அடுக்கி வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அகல் விளக்குகள் ஏற்றி பூக்கள் வைத்து முருகனை நினைத்து வழிபடுகின்றனர்.

    சிலர் சிறு சிறு கற்களையும் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

    இதற்காக அருகிலேயே செங்கற்களும் கிடைக்கிறது.

    பின்னர் 6 வாரம் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தால் உங்களது ஆசை பூர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வசதியும் இல்லை.

    கையில் அதற்கான பணமும் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு சிறுவாபுரி வந்து முருகனை வணங்கலாம்.

    அதே போல 'திருப்புகழ்' பதிகத்தையும் தொடர்ந்து உச்சரித்து வர வேண்டும்.

    இப்படி செய்வதினால் உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஏழ்மைநிலை மாறி சொந்த வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழ்நிலை உருவாகும்.

    நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
    • எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரமும் மூலவர் சந்நிதியில் அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    ஆறாவது வாரம் மூலவர் சந்நிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.

    இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.

    எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் பொழுதும் இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம்பழம் கொண்டு வணங்க வேண்டும்.

    ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூ வைத்து பூஜித்து வர வேண்டும்.

    முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வார எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஓர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும்.

    இவ்வாறு ஐந்து வாரம் செய்து விட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்த பழத்தை ஈரம் படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும்.

    இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.

    நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும்.

    ×