search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவான்"

    • பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார்.

    நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

    மேலும் பாலிவட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜவான் திரைப்படம் நயந்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது.

    இதற்கிடையில் நயன்தாரா, நெற்றிக்கண், ஐரா, கொலையுதிர் காலம், அன்னபூரணி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் நடித்து வெளியான எந்த கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. அவர் நடிப்பில் வெளியான அன்னப்பூரணி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அடுத்ததாக நயன்தாரா மண்ணாங்கட்டி Since1960 எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ட்யூட் விக்கி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு பூஜை உடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை நயன்தாரா பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.
    • அட்லீ இயக்கிய ஜவான் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

    லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நயன்தாராவின் மார்க்கெட் படத்திற்கு படம் உயர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. தமிழில் 'ஐயா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

    சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருமணத்துக்கு பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

     

    நயன்தாரா 'GQ இந்தியா' மேகசின் நடத்தும் விருது விழாவில் 'மோஸ்ட் இன்புளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024' விருதை வென்றிருக்கிறார்.

    கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன்தாரா.

    நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருப்பு உடை புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.

    இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும்.
    • இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை குவித்தது ஜவான்.

     அட்லீ குமார் தனது 19வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    இதைஅடுத்து, ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    புதுடெல்லியில் நேற்று 'NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார். மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த விழாவில் ஜவான் படம் ஷாருக்கனை வைத்து இயக்க தோன்றியது ஏன் என்ற கேள்விக்கு," ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். "க்ளோபல் ஐகான்" அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார் அட்லீ.

    பின் அட்லீ 2019 ஆம் ஆண்டில் ஷாருக்கானை சந்தித்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.

    "நானும் ஷாருக்கான் சாரும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு சென்றோம். சென்னை சூப்பர் கிங்க்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றது. அப்போது, நானும் ஷாருக்கான் சாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்கள் சில பேர் மட்டும்தான்.

    அதை விமர்சித்தவர்கள் தான் நிறைய பேர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் சரியானவனா, அவர் முன்னாடி நிற்கும் தகுதி இவனுக்கு இருக்கா ? என பலப்பேர் விமர்சித்தனர். அவர்களுக்கான பதில் தான் இந்த விருது. அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் நன்றி" என தெரிவித்தார்.

    மேலும்," நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும். யாருக்காகவும் உங்கள் கனவை விட்டு கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நோக்கி பயணியுங்கள்" என்றார் அட்லீ.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
    • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

    இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

     


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    • வல்ச்சர் ஸ்டண்ட் விருதுகள் 2023ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது
    • பதான், ஜவான் ஆகிய படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தன

    ஆக்ஷன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்தாலும், திரைப்பட விருதுகளில் சண்டை காட்சி பிரிவில் விருது வழங்குதல் குறைவு.

    சிறந்த நடிகர், நடிகையர், வில்லன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், சண்டை காட்சிகளை வடிவமைப்பவர்களுக்கு மக்களின் பாராட்டுகளே பெரிய விருதாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின் வாக்ஸ் மீடியா நெட்வொர்க்ஸ் (Vox Media Networks) நிறுவனத்தின் ஒரு அமைப்பான வல்ச்சர் (Vulture) எனும் பத்திரிகை, வல்ச்சர் ஸ்டண்ட் அவார்ட்ஸ் (Vulture Stunt Awards) என திரைப்படங்களில் இடம்பெறும் பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்கு பரிசுகள் வழங்க தொடங்கியது.

    சண்டை காட்சிகள் என ஒரே பட்டியலிடாமல், வான்வெளி, தரை, வெடி விபத்து காட்சிகள், சேசிங் என பல உட்பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுவது இதுவரை திரையுலகில் இல்லாத சிறப்பான அம்சம் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    2024க்கான விருதுக்கு 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களில் உலகின் முன்னணி ஆக்ஷன் கதாநாயகர்களான டாம் க்ரூஸ் (Tom Cruise) மற்றும் கீனு ரீவ்ஸ் (Keanu Reeves) ஆகியோரின் ஹாலிவுட் படங்கள் பட்டியலில் உள்ளன.

    இந்நிலையில், இந்தி திரையுலக முன்னணி கதாநாயகனான ஷாருக் கான் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "பதான்" (Pathan) மற்றும் "ஜவான்" (Jawan) எனும் இரு படங்களும் போட்டியில் இடம்பெற்றுள்ளன.


    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியான பதான், சிறந்த வான்வெளி ஸ்டண்ட் காட்சி மற்றும் சண்டை காட்சி பொது பிரிவு என இரு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் பதான் ரூ.1055 கோடி வசூல் செய்தது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான ஜவான், சிறந்த வாகன ஸ்டண்ட், ஆக்ஷன் படங்களில் சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஆக்ஷன் திரைப்படம் என 3 பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் ஜவான் ரூ.1160 கோடி வசூல் செய்தது.

    போட்டியில் இந்திய ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மகிழும் வகையில் இப்படங்கள் விருதுகளை வெல்லுமா என்பது மார்ச் 4 அன்று தெரிந்து விடும்.

    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.



    இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    • ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.


    நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.


    இந்நிலையில், நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில், படப்பிடிப்பு தளத்தில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "புதிய தொடக்கத்தை நம்புங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் நயன்தாரா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ’ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.
    • ஷாருக்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டியது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஷாருக்கான் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 'ஜவான்' படத்தை Extended Cut-வுடன் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.


    • அட்லீ ‘ஜவான்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.


    இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் அட்லீ வாயில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    ×