search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car"

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாதான் மாநிலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ள ஜோரவார்புரா என்ற கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     

    பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார். அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கி அருகில் இருந்த பூங்காவுக்கு சென்ற நிலையில், பிரதீப், தனது இளைய மகள் கோர்விகா சாகர் மனைவியுடன் இறங்கி சென்றுவிட்டதாக கருதி மகள் உள்ளே இருப்பதை அறியாமல் காரை லாக் செய்துவிட்டு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

    அவரின் மனைவியோ மகள் கணவருடன் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்தே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் உணர்ந்து காருக்கு சென்று பார்க்கையில், குழந்தை மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், பெற்றோர்கள் குழந்தையின் பிரேத பரிசோதனை செய்யவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

    • மாருதி சுசுகி இக்னிஸ் மாடலின் அளவிலேயே ஹூண்டாய் கார் உள்ளது.
    • இந்த காரில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கேஸ்பர் பெயரை பயன்படுத்துவதற்காக காப்புரிமை பெற்று இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது கேஸ்பர் என்ட்ரி லெவல் எஸ்.யு.வி. மாடலை தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    புதிய ஹூண்டாய் கேஸ்பர் மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்டர் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்படும். வாகனங்களின் பெயர்களை காப்புரிமை பெற்று கொள்வதை ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு காப்புரிமை பெறுவதால், அந்த கார் குறிப்பிட்ட சந்தையில் கட்டாயம் அறிமகமாகி விடும் என்றும் கூறிவிட முடியாது.

     


    தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலின் அளவிலேயே ஹூண்டாய் கேஸ்பர் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் அளவில் 3595mm நீளம், 1595mm அகலம், 1575mm உயரம் மர்றும் 2400mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த கார் எக்ஸ்டர் மாடலை விட 220mm வரை நீளம் குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ மற்றும் கிராண்ட் i10 நியோஸ் மாடலை போன்ற பிளாட்பார்மிலேயே புதிய கேஸ்பர் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • மேனுவல் வெர்ஷன் விலை ரூ. 31 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்மார்ட் பிளஸ் S வேரியண்டின் விலை ரூ. 41 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காரின் புதிய என்ட்ரி லெவல் வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டீசல் வெர்ஷன்களின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    டாடா நெக்சான் மாடலின் பெட்ரோல் வெர்ஷன் முற்றிலும் புதிய ஸ்மார்ட் (O) வேரியண்டிலும், டீசல் வெர்ஷன் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்டிலும் கிடைக்கின்றன. முன்னதாக டாடா நெக்சான் மாடலின் என்ட்ரி வேரியண்ட் ஸ்மார்ட் என்றே அழைக்கப்பட்டது. டீசல் என்ஜின் மிட் ரேஞ்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

     


    புதிய ஸ்மார்ட் (O) வேரியண்ட் விலை ஸ்மார்ட் வேரியண்டை விட ரூ. 16 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். டீசல் வெர்ஷனில் ஸ்மார்ட் பிளஸ் மாடலின் விலை ரூ. 1.2 லட்சம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்தில் இருந்தே கிடைக்கிறது. நெக்சான் பியூர் டீசல் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா நெக்சான் டீசல் என்ட்ரி லெவல் வேரியண்டில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, நான்கு ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் கேமரா, ஷார்க் ஃபின் ஆன்டெனா, பல்வேறு வசதிகளை கொண்ட ஸ்டீரிங் வீல், பவர் விண்டோ, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட்களில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேஷன், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. நெக்சான் ஸ்மார்ட் பிளஸ் வேரியண்ட் மேனுவல் வெர்ஷன் விலை ரூ. 31 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்த வேரியண்ட் விலை ரூ. 9.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதன் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. இதில் ரிவர்ஸ் கேமரா வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நெக்சான் ஸ்மார்ட் பிளஸ் S வேரியண்டின் விலை ரூ. 41 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ. 9.39 லட்சம் என மாறியுள்ளது.

    • அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
    • 2024 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் விற்பனை மையங்கள் சார்பில் விர்டுஸ், டைகுன் மற்றும் டிகுவான் மாடல்களுக்கு சிறப்பு சலுககள் வழங்கப்படுகின்றன. மே மாத சலுகைகளின் கீழ் வழங்கப்படும் சிறப்பு சலுகை மற்றும் பலன்கள் ஒவ்வொரு பகுதி மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுப்படும்.

    அந்த வகையில், வோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்சைஸ் செடான் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 90 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. இவை 2023 மாடல்களுக்கானது ஆகும். 2024 மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.


     

    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலை வாங்குவோருக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. வேரியண்டிற்கு ஏற்ப டைகுன் மாடலை வாங்கும் போது ரூ. 65 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    2023 டிகுவான் எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 75 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 75 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். இத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு சர்வீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. 2024 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

    • புதிய ஆடி கார்களில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இரு மாடல்களிலும் R18 அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய Q3 போல்ட் எடிஷன் மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு எஸ்.யு.வி. மாடல்களின் விலை முறையே ரூ. 54 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ரூ. 55 லட்சத்து 71 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தனித்துவ டிசைன் மூலம் இரண்டு புதிய வேரியண்ட்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களாக ஆடி Q3 மற்றும் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் உள்ளன. அந்த வகையில், இவற்றின் புதிய வேரியண்ட்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

     


    இரண்டு புதிய ஆடி கார்களிலும் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் வசதி உள்ளது. இதில் உள்ள என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இவைதவிர ஆடி Q3 போல்ட் மற்றும் Q3 ஸ்போர்ட்பேக் போல்ட் எடிஷன் என இரு மாடல்களிலும் R18 அலாய் வீல்கள், ஸ்போர்ட்பேக் மாடலில் பிரத்யேக S-லைன் பேக்கேஜ், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பானரோமிக் கிளாஸ் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், லெதர் ஸ்டிராப் கொண்ட ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவற்றுடன் இரு கார்களிலும் ஆம்பியன்ட் லைட் பேக்கேஜ், கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் ஏய்ட் மற்றும் ரியர் வியூ கேமரா, ஆடி ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச் போன்ற வசதிகள் உள்ளன.

    • இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • இந்த கார் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     


    இதுதவிர, சிஸ்லிங் ரெட், பியல் ஆர்க்டிக் வைட், மேக்மா கிரே மற்றும் ஸ்பிலென்டிட் சில்வர் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. இத்துடன் லஸ்டர் புளு - மிட்நைட் பிளாக் ரூஃப், சிஸ்லிங் ரெட் - மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் - மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற டூயல் டோன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு- பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு சேடின் மேட் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் அசிமெட்ரிக் டயல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 9 இன்ச் அளவில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கீரன் சிஸ்டம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் போன் மிரரிங், சுசுகி கனெக்ட், ரியர் ஏ.சி. வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி, ஆறு ஏர்பேக், இ.எஸ்.பி., பிரேக் அசிஸ்ட், 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

    2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட Z சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 ஹெச்.பி. பவர், 112 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் LXi, VXi, VXi(O), ZXi, மற்றும் ZXi+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • பிரீமியம் ஹேச்பேக் மாடல் i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஹூண்டாய் i20, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் மாடலுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகளை வழங்குகிறது.

    வெர்னா, கிரெட்டா, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலம், ஸ்டாக் இருப்பு மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுப்படும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எக்ஸ்டர் மாடல் 8 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தத்தில் 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 13 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் 83 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 69 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் சி.என்.ஜி. ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனினும், இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடலான i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12.52 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
    • கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கோடை காலத்தை ஒட்டி தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இறுக்கிறது. இதில் ஹோண்டா எலிவேட், சிட்டி மற்றும் அமேஸ் மாடல் கார்களுக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 56 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. அமேஸ் எலைட் எடிஷன் மாடலுக்கு ரூ. 96 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிவேட் மாடலின் பேஸ் வேரியண்ட்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் V வேரியண்டிற்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், எலிவேட் ZX மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார் வாங்குவோர் மட்டுமின்றி ஏற்கனவே கார் வைத்திருப்போர் ஏ.சி. சர்வீஸ் செய்யும் போது 15 சதவீதம் வரை தள்ளுபடியும், ஏ.சி. சார்ந்த சேவைகளில் லேபர் கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • AX3 வேரியண்ட்-ஐ விட ரூ. 3 லட்சம் வரை குறைவு.
    • புது வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலின் புதிய 7 சீட்டர் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. XUV700 புதிய வேரியண்ட் MX என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும்.

    இதுவரை XUV700 MX வேரியண்ட் ஐந்து பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதிக இருக்கை அமைப்பில் கிடைப்பதால், XUV700 புது வேரியண்ட் மேலும் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

     


    மஹிந்திரா XUV700 புதிய MX வேரியண்டில் ஏழு இன்ச் அளவில் MID டிஸ்ப்ளே, எட்டு இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏ.சி. வெண்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய வேரியண்டிலும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா காரின் புது "GX+" வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய GX மற்றும் VX வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.

    அதன்படி புதிய வேரியண்டில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்டு மிரர், டேஷ் கேமரா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிரீமியம் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    புதிய அம்சங்கள் தவிர இன்னோவா க்ரிஸ்டா GX+ வேரியண்டின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடல் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. எனினும், கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை இதற்கு போட்டியாக அமைகின்றன.

    • புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2024 குர்கா சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய 2024 போர்ஸ் குர்கா மாடலின் மூன்று கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம் என்றும் ஐந்து கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 18 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்பைடயில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2024 போர்ஸ் குர்கா மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். 2024 குர்கா மாடலின் வெளிப்புறம் புதிய அலாய் வீல்கள், ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    உள்புறத்தில் புதிய இருக்கை மேற்கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் TPMS, முன்புறம் டூயல் ஏர்பேக், 8.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 132 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் 4 வீல் டிரைவ் வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் என்ட்ரி லெவல் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    ×