என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "birthday"
- வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை.
- தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் வெளியானது.
திருப்பதி:
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 41-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள செய்யேறு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திர சாமி கோவிலுக்கு ரூ.12.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
மேலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஆந்திர பிரதேச முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார்.
ஜூனியர் என்.டி.ஆர் நடித்த தேவாரா படத்தின் முதல் சிங்கிள் அச்சம் என்ற பாடலும் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு ஜூனியர் என்.டி.ஆர். நன்கொடை அளித்திருப்பதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
- இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
- சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது.
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
சாய் பல்லவி - நாக சைதன்யா ஜோடியாக நடிக்கும் படம் தண்டேல். இப்படத்தின் பூஜை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தை அல்லு அரவிந்தின் Bunny vaas GA 2 Pictures தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீகாகுலம் பகுதியில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு DSP இசையமைக்கவுள்ளார்.
தண்டேல் படம் ஒரு மீனவனின் காதல் பற்றிய உண்மைக் கதையாகும். இதனால் சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உள்ளது. இப்படத்திற்கு நாகசைதன்யா தனது உடல் எடையைக் கூட்டியுள்ளார்.இப்படம் நல்ல கதைக்களம் கொண்ட படம் என்பதால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது
இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 32 - வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சாய்பல்லவியை கவுரவிக்கும் வகையில் சாய் பல்லவி படப்பிடிப்பு தள சிறப்பு வீடியோவை 'தண்டேல்' படக்குழு இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Sai Pallavi Birthday Special ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 9, 2024
pic.twitter.com/r4SSLZGnOE
- திரிஷா தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
- திரிஷாவுக்கு பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து நடிகையான திரிஷா இன்றும் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கதாநாயாகியாக இருக்கும் திரிஷா நேற்று (மே 4) தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை திரிஷா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
♥️♾️?????#blessed #grateful #thankful
— Trish (@trishtrashers) May 5, 2024
Thanks to each and every one of you who took the time out to make me feel this way?? pic.twitter.com/CH4UBLvSFl
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்
- அஜித்திடம் சொகுசு கார்கள் இருந்தாலும், பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு.
நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.
மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர்.
இந்நிலையில் அஜித் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதையொட்டி நடிகை ஷாலினி, தனது காதல் கணவர் அஜித்தின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் .இதன் விலை ரூ.23 லட்சம் ஆகும்.
அஜித்திடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவருக்கு பைக்குகள் மீது தனி ஆர்வம் உண்டு. அஜித் பைக் பிரியர் என்பதால் 'டுகாட்டி' 'பைக்' ஷாலினி பரிசாக கொடுத்துள்ளார்.
ஷாலினி தனது கணவருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அஜித்தின் பிறந்த நாளை மேலும் சிறப்பாகும் விதத்தில், விடாமுயற்சி குறித்த அப்டேட் மற்றும் குட் பேட் அக்லி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
- ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.
இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
- "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்து வருகிறார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவே. சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் இரு வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார்.
தற்போது, "கேம் சேஞ்சர்" படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று தனது 51வது பிறந்த நாள் முன்னிட்டு இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் சங்கருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்.
- 'பிளாஷ்பேக்' -ல் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது
நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசு' அளித்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் நேற்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு வெளியிட்டது.
இந்த 'டீசர்' இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து 'சித்தா' படம் புகழ் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சியான்-62 புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.
இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் 'டைட்டில்' விக்ரம் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டீஸரும் வெளியிடப்பட்டது. அவர் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். ' வீர தீர சூரன் ' ஒரு அதிரடி திரைப்படமாக விரைவில் உருவாக உள்ளது.
இப்படத்தில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதுதவிர மேலும் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார். 'பிளாஷ்பேக்' போர்ஷனில் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது
- தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.
தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது
நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் அவரது பிறந்த நாளை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு இன்று வெளியிட்டது.
இந்த 'டீசர்' இணைய தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.
:தங்கலான்' படத்திற்காக விக்ரமுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் இப்படத்தில் கடினமாக விக்ரம் உழைத்துள்ளார். படம் ரிலீசுக்கு பின் விக்ரமுக்கு பாராட்டு, மற்றும் விருதுகள் குவியும் என ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
- சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான 'மதச்சார்பற்ற நாடு' என்பதை மாற்றி இந்தியாவை 'மதம் சார்ந்த நாடு' என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்ட பூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.
அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பா.ஜ.க. பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
அரசமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்து மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதுதான் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் திட்டமாகும். அதற்காகவே அவர்கள் தேர்தல் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து'நாட்டை மீட்போம்! அரசமைப்புச் சட்டம் காப்போம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
- இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.
படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக ' கொடுத்து உள்ளது.
- வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.
பிரபல மலையாள நடிகை பார்வதி. 2006- ம் ஆண்டு 'அவுட் ஆப் தி சிலபஸ்' எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாள முன்னணி நடிகையான பார்வதி 2008- ல் தமிழில் 'பூ' படத்தில் நடித்தார்.
மேலும் 'சென்னையில் ஒரு நாள்', மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ' தங்கலான்' படத்தில் பார்வதி நடித்து வருகிறார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார்.
சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது.
இதை யொட்டி மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்து உள்ளது.
மேலும் நடிகை பார்வதி பிறந்தநாளை யொட்டி ஏராளமான ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
- ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.
தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து ராஷ்மிகா நடித்த அனிமல் படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தற்போது அல்லுஅர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது 28-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
அவருக்கு திரை உலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சமந்தா தெரிவித்த வாழ்த்து பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புள்ள ராஷ்மிகா உங்களுக்கு இது மற்றொரு அழகான ஆண்டு என பதிவிட்டுள்ளார்.
தமன்னா வெளியிட்டுள்ள பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஷ்மிகா. உங்களுக்கு இது சிறந்த ஆண்டாகவும் நிறைய அன்பு கிடைக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
சக நடிகையான ராஷ்மிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
இவ்வாறு ஏராளமான நடிகர், நடிகைகள் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிறந்த நாளையொட்டி புஷ்பா 2 படக் குழுவினர் படத்தில் ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்